இனிய பழங்களை வாரிக்கொண்டு
விரைந்து ஓடி, வளம் பயில் மள்ளர்தம்
சேரிசேர அழித்துப் பரந்து பெருகிற்று - பலவகைச் செல்வங்களும் பழகும்
உழவர் சேரிகள் முழுவதையும் அழித்து எல்லா இடங்களிலும் பரவிப்
பெருகியது.
செழும்புனல்
: பண்புத்தொகை; "ஈறு போதல், இனமிகல்" என்ற
சூத்திர விதியால் ஆயது. பெருமை + யாறு = பேரியாறு. பயிர்த்தொழிலால்
வந்த பலவகை யுணவுப்பொருள்கள் (பதினெண் கூலங்கள்) எல்லாம்
நிறைந்து பழகும் மனைகளையுடையது உழவர் சேரி என்பது தோன்ற
"வளம்பயில் மள்ளர்தம் சேரி" என்றார்.
(27)
|
நாட்டில்
நல்லோதைகள் |
42. |
நாடு தோறும்
மலிந்த நறும்புனல்
ஓடும் ஓதையும் ஓங்கு தடங்கரைஹ
சாடும் ஓதையும் தண்டலை வண்டுகள்
பாடும் ஓதையும் எங்கும் பரந்தவே. |
(இ - ள்.)
நாடு தோறும் மலிந்த நறும் புனல் ஓடும் ஓதையும் -
கோசலநாட்டின் பல்வேறிடங்கள் எல்லாம் நிறைந்த நறுநீர் வெள்ளம்
பாய்ந்து ஓடுகின்ற ஒலியும், ஓங்கு தடங்கரை சாடும் ஓதையும் - உயர்ந்த
பெரிய கரைகளிற் மோதுகின்ற ஒலியும், தண்டலை வண்டுகள் பாடும்
ஓதையும் எங்கும் பரந்த - சோலைகளில் வண்டுகள் முரலுகின்ற ஒலியும்
ஆகிய இன்னிசை எவ்விடங்களினும் பரவின.
நாடு என்பது நாட்டுள்ளடங்கிய இடங்களைக் குறித்தது
: ஆகு
பெயர். நீர் ஓடும் ஒலி கரையை நீர் சாடும் ஒலி வண்டுகள் பாடும் ஒலி
இவை நிறைந்திருந்தன அந்நாட்டில் என்பது.
(28)
|
மள்ளர்
மது உண் மகிழ்ச்சி |
43. |
கள்ள லம்பிய
வாயும் களிமகிழ்
உள்ள லம்பிய உள்ளமும் தோன்றவே
புள்ள லம்பிய பொய்கைக் கரையெலா
மள்ளர் வந்து நெருங்கி மலிந்தனர். |
(இ - ள்.)
கள் அலம்பிய வாயும் - மது வழிகின்ற வாயும், களி
மகிழ் உள் அலம்பிய உள்ளமும் - மது அருந்திய மகிழ்ச்சி பொங்கித்
ததும்பி வழிகின்ற மனமும், தோன்ற - வெளியே தோன்றும்படியாக, புள்
அலம்பிய பொய்கைக் கரை எலாம் - பறவைகள் ஒலிக்கின்ற
குளக்கரைகளில் எல்லாம், மள்ளர் வந்து நெருங்கி மலிந்தனர் - உழவர்கள்
வந்து கூடி நிறைந்தனர்.
கரை எலாம் : ஒருமைப்பன்மை மயக்கம் : எலாம்
: தொகுத்தல்;
பொய்கைகளில் உள்ள மீன்களை யுண்டு களித்ததால் பறவைகள்
பாடிக்கொண்டு கரைகளில் இருந்தன என்பது தோன்ற, "புள்ளலம்பிய
பொய்கை" என்றார். மள்ளர் - மருதநிலமாக்கள். அவர்களைப் பள்ளர்
|