அனைத்தும்:
முற்றும்மை: புகு: பகுதி; அ: பலர்பால் விகுதி. பகுதி
ஒற்று இரட்டித்து இறந்தகாலங் காட்டியது. முனிவனை வணங்கி அவ்வாறே
செய்யக் கருதி நாட்டின் புறங்களெல்லாம் புகுந்தன என்க.
(44)
|
அரிச்சந்திரன்
நாட்டினை யழித்தல் |
503. |
வெள்ளை
ஆனிரை வெம்புலி கோளரி
கொள்ளை ஆடின கொல்லையும் சோலையும்
வள்ளை சூழும் வயலும் புனங்களும்
கிள்ளை தோகை கிளையொடு மொய்த்தவே. |
(இ - ள்.)
வெள்ளை ஆன் நிரை - வெண்மையான
பசுக்கூட்டங்களை, வெம் புலி கோள் அரி கொள்ளை ஆடின -
கொடிய புலிகளும் வலிய சிங்கங்களும் முற்றிலும் கொன்று தின்றன,
கொல்லையும் சோலையும் வள்ளை சூழும் வயலும் புனங்களும் -
தோட்டங்களையும் சோலைகளையும் வள்ளைக் கொடிகள் படர்ந்த
வயல்களையும் தினைப்புனங்களையும், கிள்ளை தோகை கிளையொடு
மொய்த்த - கிளிகளும் மயில்களும் தங்கள் இனத்தோடு கூட்டமாய்ப்
போய்க் கொத்தித் தின்று அழித்தன.
ஆ ஆன் : னகரமெய் சாரியை; தோகை : சினையாகுபெயர்;
வெம்புலி கோளரி: உம்மைத்தொகை, ஆன் நிரை எனவே ஆடுகளும்
எருமைகளும் அதன் இனமாதலின் அவற்றையும் அழித்தன எனக் கொள்க.
(45)
|
மந்தி
யானைகளின் செயல் |
504. |
அடர்ந்து
மந்தியும் வண்டும் அகன்கடந்
தொடர்ந்து செல்வன சோலைகள் பாழ்படப்
படர்ந்து யர்ந்த பழுமரம் காய்மரம்
இடந்தி ரித்தன யானைகள் எங்குமே. |
(இ
- ள்.) மந்தியும் வண்டும் - குரங்குகளும் வண்டுகளும்,
அடர்ந்து - நெருங்கி, அகல் கடம் தொடர்ந்து செல்வன - அகன்ற
காடுகளைத் தொடர்ந்து செல்வனவாய் அழித்தன, யானைகள் யானைகள்,
சோலைகள் படர்ந்து உயர்ந்த பழு மரம் காய் மரம் - சோலைகளில்
எல்லா இடங்களிலும் பரந்து உயர்ந்த பழுத்த மரங்களையும் காய்த்த
மரங்களையும், எங்கும் இடந்து இரித்தன - எங்கும் பிளந்து சாய்த்தன.
வெல்வன
என்னும்முற்று சென்று அழித்தன என்ற பொருளைக்
குறிப்பாலுணர்த்தியது. பழுமரம், காய்மரம்: வினைத்தொகை. இடந்து -
பிளந்து: இரித்தன - சாய்த்தன. இரிதல் - சாய்தல். யானைகள்
சோலைகளுட் புகுந்து பழுமரம் காய்மரங்களைப் பிளந்து சாய்த்தனவெனக்
கொள்க.
(46)
|