வந்தனர்
- வா: பகுதி: த் : சந்தி; ந் ஆனது விகாரம்; த்:
இறந்தகால இடைநிலை; அன்: சாரியை; அர்: பலர்பால் வினைமுற்று
விகுதி. கண்டிகை - பதக்கம். யானைக்கொம்பில் உண்டாகிய முத்தும்
குன்றி மணியும் கலந்து கோத்த மாலையும் பன்றிக்கொம்புப் பதக்கமும்
மார்பில் அணிந்து வந்தனர் சில வேடர் என்க.
(10)
|
வெண்ணிற
வேட்டை நாய் வரவு |
531. |
பாச
மிற்றிட விசித்தசங் கிலிகள்
பற்ற றத்தமி லழன்றுவெம்
பூச லிட்டன லெனச் சினத்துறு
புணர்ச்சி யின்மிகும் உணர்ச்சியாய்க்
கேச ரிக்குருளை என்னஊ ளைபயில்
கீதை ஓதைதிசை நாலினும்
வீச முற்செல நெருக்க முற்றுவரு
வெண்சு ணங்குசத கோடியே.
|
(இ
- ள்.) பாசம் இற்றிட - கட்டிய கயிறுகள் அறுந்து போக,
விசித்த சங்கிலிகள் பற்று அற - கட்டின சங்கிலிகள் தொடர் விட, தமில்
அழன்று -தங்களுக்குள்ளே பகைத்து, வெம் பூசல் இட்டு - கொடிய
சண்டையிட்டு, அனல் எனச் சினத்து - தீயெனக் கோபங்கொண்டு, உறு
புணர்ச்சியின் மிகும் உணர்ச்சியாய் - பொருத்தமான பெண் நாய்களோடு
கூடவேண்டுமென்ற உணர்வுடையனவாய், கேசரிக் குருளை என்ன -
சிங்கக்குட்டிகள் போல, ஊளை பயில் கீதை - ஊளையிடுகின்ற இனிய
கீதம் போன்ற, ஓதை - ஒலியானது, திசை நாலினும் வீச - நான்கு
திக்குகளிலும் பரவும்படி, முற்செல நெருக்க முற்று வரு வெண் சுணங்கு
- முன்னே சென்று ஓடுவதற்காக நெருக்கிக் கொண்டு வருகின்ற வெள்ளை
நாய்கள், சத கோடி - நூறு கோடிக் கணக்கானவை.
தமில் : தொகுத்தல்; நாலினும் : முற்றும்மை; வெண் சுணங்கு :
பண்புத்தொகை. நூறு கோடி என்பது கணக்கில்லாதன என்ற பொருளைத்
தந்தது. நாய்கள் ஒன்றோடொன்றுபகை கொண்டன போலக் குரைப்பதும்,
கயிறுகளை யறுப்பதும், சங்கிலிகளை இழுத்து முறிப்பதும், புணர்ச்சிக்குரிய
உணர்ச்சியுடன் செல்வதும் நாய்களின் இயற்கை. அவ்வியற்கையைக்
கூறினர் என்று கொள்க.
(11)
|
செந்நிற
நாய் வரவு |
532. |
அந்த
ரத்திடிஎ னக்கு ரைத்துமுதி
ராழிபோ லுறுமி வார்தடம்
கந்த ரத்திறுக நின்று ரப்பியிரு
கால்மடக் கிஎதிர் தாவியே
தந்த மிற்கறுவு கொண்டு பல்பல
தயங்க வெங்கன றடங்கணாற்
சிந்தி டச்சருவி முன்க தித்துவரு
செஞ்சு ணங்குசத கோடியே. |
|