தோன்றி உயரத்தில்
எழுந்தன, கடையுகத்தின் நான் - ஊழிக்கால
முடிவு நாளில், எழுந்த கடல் போல - பொங்கி எழுந்த கடலைப்போல,
மன்னவர் பெரும் படை எங்கணும் நடந்த - அரசனுடைய பெரிய
சேனைகள் எல்லா இடங்களிலும் நடந்தன, வாள் எழுந்த சுடர் -
வாளாயுதத்தினின்று எழுந்த ஒளியானது, எண் திசாமுகம் மறைத்த -
எட்டுத் திக்குகளிலுள்ள இடங்களை எல்லாம் மறைத்தது, மா முகில்
நெருக்கித்துகள் எழுந்தன - பெரிய மேகங்களை நெருக்கிக்கொண்டு
சேனைத்தூசிகள் கிளம்பின, கயங்கள் சென்றன-யானைகள் சென்றன,
துரங்கம் முன்துற நடந்த - குதிரைகள் முன்னே நடந்தன.
ஏகாரம் :
ஈற்றசை; கடையுகம் : இலக்கணப்பொலி; திசை+முகம் -
திசாமுகம்; இது வடமொழி, திசை முகம் என்பது தமிழ், கோள் என்பது
சூரியன் சந்திரன் ஆகிய இருகோள்களையும் குறித்தது. மற்றைக்
கோள்கள் குடைக்கு உவமையாகா ஆதலின், இவ்விரண்டு கோள்களும்
பலவாக எங்கும் எழுந்தன போலத் தோன்றின குடைகளின் தோற்றம்
என்க.
(20)
|
அரசன்
சேனை வேடர் கூட்டத்தைச்
சென்று
சேர்தல் |
541. |
கோட
கம்தருவி லாழி யும்கரட
குஞ்ச ரம்தருவி லாழயும்
ஆட கக்கவரி யும்செ றிந்துபகி
ரண்ட கோளமும் மறைந்திட
மாடவீ திகள்க டந்து செம்பொன்மதில்
வாயில் விட்டகல நண்ணியே
வேடர் சேனையோடு கூடி னானமுத
வேலை மைக்கடலில் வீழ்தல்போல். |
(இ - ள்.)
கோடகம் தரு விலாழியும் - குதிரைகளின்
வாயிலிருந்து வரும் நுரையும், கரட குஞ்சரம் தரு விலாழியும் - மதம்
பொழிகின்ற யானைகளின் வாயிலிருந்து வருகிற நுரையும்,
ஆடகக்கவரியும் - பொற்காம்புள்ள சாமரங்களும், செறிந்து - நெருங்கி,
பகிரண்ட கோளமும் மறைந்திட - வெளியுலகும் மறைந்து போகும் படி,
மாட வீதிகள் கடந்து - மாடவீதிகளைக் கடந்துபோய், செம்பொன்
மதில் வாயில் விட்டு - செம்பொன்னிழைத்த கோட்டைவாயிலைக்
கடந்து, அகல நண்ணியே - வெகுதூரம் கடந்துபோய், அமுத வேலை
மைக் கடலில் வீழ்தல் போல் - பாற்கடலானது கருங்கடலில் போய்ச்
சேர்வது போல, வேடர் சேனையொடு கூடினான் - அரிச்சந்திரன்
கருநிறம்பொருந்திய வேடர் சேனையோடு போய்க் கலந்தான்.
அரிச்சந்திரன் சேனையின் கொடி குடை சாமரங்களின்
நிறம்
வெண்மை; யானை குதிரை இவற்றின் வாய் நுரையும் வெண்மை;
ஆகலின் பாற்கடற்கு உவமையாயிற்று. வேடர்களின் உடல் கருநிற
மாகலின் அவர்கள் சேனைக்குக் கருங்கடல் உவமையாயிற்று. பாற்கடல்
சென்று கருங்கடலில் கலந்தது போல இருந்தது என்க.
(21)
|