பக்கம் எண் :


274

     அல்லின் என்பது அலின் எனத் தொகுத்தலாயிற்று, இது
தொகுத்தல் விகாரம்.நனி : உரிச்சொல், இறந்துபட்ட பிணங்களின்
குவியல்களிலிருந்து வெளியேறி ஓடமுடியாமல் உயிருள்ள
விலங்குகளும் அங்கங்கே நின்றன என்பது.
                                                    (28)

 
549. பட்ட பட்டவை எடுத்து வேடுவர்
   பருத்த கட்டைகள் அடுக்கியே
சுட்ட சுட்டதசை தின்று தின்றுறு
   சுணங்கி னம்பல பிணங்கவே
மட்ட றப்பருகி இட்ட ளித்திலர்
   மடுக்க ளிற்புன லருந்தியே
இட்ட மாலைபுனை மன்னர் மன்னவன்
   இருந்த சூழலிடை எய்தினார்.

     (இ - ள்.) பட்ட பட்டவை எடுத்து - இவ்வாறு இறந்த இறந்த
மிருகங்களையெல்லாம் எடுத்து, வேடுவர் - வேடர்கள், பருத்த
கட்டைகள் அடுக்கிச் சுட்ட சுட்ட தசை தின்று தின்று - பெரிய
கட்டைகளை அடுக்கிச் சுட்டு இறைச்சிகளை மேலும் மேலும் தின்று,
உறுசுணங்கினம் பல பிணங்க - வந்து பொருந்திய நாய்க்கூட்டங்கள்
பல தம்முள் சண்டையிடும்படி, மட்டு அறப் பருகி - கள்ளை
மிகுதியாகக் குடித்து, இட்டு அளித்திலர் மடுக்களில் புனல் அருத்தி -
நாய்களுக்குக் கொடுக்காதவர்களாகித் தாமே தின்று குளங்களிலுள்ள
நீரைக் குடித்து, இட்ட மாலை புனை மன்னர் மன்னவன் இருந்த
சூழலிடை எய்தினார் - தான் விரும்பிய வாகைமாலையணிந்த
பேரரசனாகிய அரிச்சந்திரன் இருந்த பக்கம் வந்தார்கள்.

     மடுக்களின் நீர் குடித்தல் - குடிமயக்கம் தீர்தற்பொருட்டு,
அடுக்குகள் பன்மைபற்றி வந்தன; அளித்திலர் : முற்றெச்சம்;
சுணங்கினம் பல பிணங்கவே இட்டு அளித்திலர் மட்டறப் பருகி எனக்
கூட்டுக.
                                                    (29)

 'தப்பி ஓடின மிருகங்களை நாடிச்செல்வதா அயோத்திக்கு வருவதா'

           என்று வேடர் அரசனை வினவல்

550. இவ்வி டத்துளவி லங்கி றந்தவெறி
  வேல்பி ழைத்தும்வலை பீறியும்
வெவ்லி டக்கணைக டப்பி யும்சில
   விலங்கு போனஉள ஆயினும்
அவ்வி டத்தினில்ந டப்ப தோஅடலி
   புகுவ தோநகரி அணைவதோ
எவ்வி டத்தினிது சேர்தும் என்றவர்
   விளம்ப மன்னவன் இயம்புவான்.