|
அறுசீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம் |
599. |
முளரிசெங்
குமுதம் நீலம் முண்டகம் குவளை வெள்ளை
கிளர்நறு மலர்க ளெல்லாம் கிளையொடு மலியப் பூத்த
அளவிலா மதியம் மீனும் மருக்கரு மலிய வண்டம்
வளர்புவி தனினும் வேதா வகுத்தன போன்ற அன்றே. |
(இ
- ள்.) முளரி செங்குமுதம் நீலம் முண்டகம் குவளை -
தாமரையும் செவ்வல்லியும் நீலமலரும் செந்தாமரை மலரும் குவளை
மலரும். வெள்ளை கிளர் நறும் மலர்கள் எல்லாம் - வெள்ளை நிறம்
விளங்கப் பெற்ற மலர்கள் பலவும், கிளையொடும் மலியப் பூத்த - தம்
இனத்தோடு மிகுதியாகப் பூத்திருந்த காட்சி, அளவிலா மதியும் மீனும்
அருக்கரும் மலிய - அளவில்லாத நிலாக்களும் விண் மீன்களும்
கதிரவர்களும் நிறையும்படி, அண்டம் வளர் புவி தனினும் வேதா
வகுத்தன போன்ற அன்றே - பிரமதேவன் வானத்தைப் பூமியிலும்
படைத்தது போன்று இருந்தது.
பிரமன்
வானத்தைப்போல மண்ணிலும் விண் மீன்களும்
வெண்ணிலவும், சூரியரும் விளங்கப் படைத்தது போன்று அவ் வாவி
தோன்றிற்று.
(79)
600. |
மண்கொளா
ததனு ணீரும் வளைகளும் மலரும் மீனும்
விண்கொளா ததனுள் வைகும் வெண்குரு கன்ன நாரை
பண்கொள்வாய் வண்டு வைகும் பதுமத்தின் பரப்பு நோக்கிற்
கண்கொளா மனமும் கொள்ளா காவியும் அன்ன தேயால். |
(இ - ள்.)
அதனுள் நீரும் வளைகளும் மலரும் மீனும் மண்
கொள்ளாது - அக் குளத்தில் நீரும் சங்கும் மலர்களும் மீன்களும் இம்
மண்ணுலகம் கொள்ளாத அளவு மிகுந்துள்ளன, அதனுள் வைகும் வெண்
குருகு அன்னம் நாரை விண் கொளாது - அக் குளத்தில் வெண்மையான
அன்னப்பறவைகளும் நாரைகளும் வானம் கொள்ளாத அளவு
மிகுந்துள்ளன, பண் கொள்வாய் வண்டு வைகும் பதுமத்தின் பரப்பு
நோக்கின் - இசை பாடும் சிறப்புடைய வண்டுகள் மொய்க்கின்ற
தாமரைமலரின் மிகுதியை நோக்கினால், கண்கொள்ளா - கண்
பார்வைக்கு அடங்காத அளவு மிகுந்துள்ளது, மனமும் கொள்ளா -
மனத்துக்கும் அடங்காது காவியும் அன்னதே - நீலோற் பலமலரும்
அவ்வளவாக மிகுந்துள்ளது.
அவ் வாவியில் நீர், சங்கு, மலர், மீன் இவை
மண்ணிலடங்காதன;
கொக்கு அன்னம் நாரை விண்ணிலடங்காதன; வண்டுகள்
தாமரையிலிருப்பவை கண்ணுக்கடங்காதன; மனத்துக்கும் எட்டாதன.
நீலமலரும் அத்தன்மையதே என்பது.
(80)
|