736. |
ஆட
ரங்குகள் அம்பலம் மடம்அன்ன சாலை
மாட மாளிகை மண்டபம் மஞ்சனச் சாலை
கூட கோபுரம் மடைப்பள்ளி கோயில்செய் குன்றம்
பீடம் ஆதனம் இவைஎனக் கொடுத்தனன் பின்னை. |
(இ
- ள்.) ஆடு அரங்குகள் - பெண்கள் நடனம் ஆடும்
சாலைகள், அம்பலம் - பொதுமக்கள் மன்றம், மடம் அன்னசாலை
மாடம் மாளிகை - மடங்களும் அன்னம் அளிக்கும் அறச்சாலைகளும்
மாடங்களும் மாளிகைகளும், மண்டபம் மஞ்சனச்சாலை - மண்டபங்களும்
குளிக்குமிடங்களும், கூடகோபுரம் மடைப்பள்ளி கோயில் செய் குன்றம் -
கூட கோபுரங்களும் மடைப்பள்ளிகளும் கோயில்களும் செய் குன்றுகளும்,
பீடம் ஆதனம் இவை என பின்னை கொடுத்தனன் - மேடைகளும்
இருக்கும் ஆசனங்களும் இவை இவை என்று கூறி மன்னன் பிறகு
கொடுத்தான்.
மன்னவன்
நடனசாலை மன்ற முதலிய எல்லாவற்றையும் ஒவ்
வொன்றாய்க்காட்டி அவற்றை அம் முனிவர்க்குக் கொடுத்தனன்.
(118)
737. |
இந்த
ஆதனத் திருந்தருள் எனமுனி இருந்தான்
அந்த எல்லையில் அரசனும் அவனடி பணிந்தான்
வந்த மன்னரும் அமைச்சரும் மங்கையர் குழாமும்
சுந்த ரக்கழற் சேனையும் அவனடி தொழுதார். |
(இ - ள்.) இந்த ஆதனத்து இருந்தருள்
என முனி இருந்தான்
- இந்த ஆசனத்தில் இருந்து அருள்வாய் என மன்னன் கூற முனிவன்
இருந்தான், அந்த எல்லையில் அரசனும் அவனடி பணிந்தான் - அந்த
நேரத்தில் அரசனும் அம் முனிவன் அடிகளை வணங்கினான், வந்த
மன்னரும் அமைச்சரும் மங்கையர் குழாமும் - அங்கு வந்த மன்னர்களும்
அமைச்சர்களும் பெண்கள் கூட்டமும், சுந்தரக் கழற் சேனையும் அவன்
அடி தொழுதார் - அழகிய வீரக்கழல் அணிந்த சேனைகளும் அம்
முனிவனுடைய திருவடிகளே வணங்கினார்.
எல்லாவற்றையும் கொடுத்தபின் தன்னரசிருக்கை
மண்டபம் வந்து
தான் அமர்ந்திருக்கும் அரியணையைக் காட்டி யமர்வித்தான். அரசனும்
பணிந்தான், மற்றவரும் அம்முனிவனை யரசனாக நினைத்துப் பணிந்தனர்
என்பது.
(119)
738. |
தொழு
தெழுந்துதம் சுடர்முடி மன்னனை நோக்கி
அழுது நின்றவத் தலைவரை அவன்கையா லமைத்துப்
பழுதி லாதுநீர் எமக்குமுன் செய்தஅப் பரிசே
முழுதும் இந்தமா முனிவற்கு முறைசெயும் என்றான். |
(இ
- ள்.) தொழுது எழுந்து தம் சுடர் முடி மன்னனை நோக்கி
- வணங்கி எழுந்து தம்முடைய ஒளி மணி பதித்த முடியணிந்த
மன்னனைப் பார்த்து, அழுது நின்ற அத்தலைவரை அவன் கையால்
அமைத்து - அழுதுகொண்டு நின்ற அச் சேனைத்தலைவர் முதலியோரை
மன்னன்
|