பக்கம் எண் :


367

சொல்லி அன்புடன் விலகிச் சென்றான், புரம் எரித்தவன் அனைய
மாமுனி புவி புரந்தான் - திரிபுரத்தை எரித்த சிவபெருமானைப் போன்ற
முனிவன் பூமியை அரசாண்டான், சிரமம் நீங்கு வீரர்கள் செறி மன்றமும்
தெருவும் - களைப்பு நீங்கிய வீரர்கள் இருக்கின்ற மன்றங்களிலும்
தெருக்களிலும், பெருகும் உட்களிப்பால் பிரமசாரிகள் மலிந்தனர் -
மிகுந்த உள்ளக் களிப்போடு பிரமசாரிகள் நிறைந்து விளங்கினார்கள்.

     பிரமசாரிகள் - திருமணம் செய்துகொள்ளாதவர். இவர்கள்
தவநெறியறிந்து நடக்க முனிவரை அடுத்து வாழ்வர் ஆதலால் நகரத்தில்
அவர்கள் நிறைந்தனர் என்றார். உட்களிப்பால் பிரமசாரிகள் மலிந்தனர்
எனவே இல்லறத்தார் மனக்கவலையாற் குறைந்து வாழ்ந்தனர் என்பது
தோன்றிற்று.
                                                   (131)

 
750. காமத் தோகையர் கருங்குழல் விரித்தனர் பரவிச்
சேமத் தூமங்கள் காட்டும்அச் சிறப்பெலாந் தேய்ந்து
தாமத் தூமலர்த் தருப்பைகள் சமிதைகள் விரித்த
ஓமத் தூமமே ஓங்கின உயர்மனை எல்லாம்.

     (இ - ள்.) காமத் தோகையர் கருங் குழல் விரித்தனர் பரவி -
அழகிய தோகை மயில்போன்ற பெண்கள் தங்கள் கரிய கூந்தலை
விரித்துப் பரவச் செய்து, சேமத் தூமங்கள் காட்டும் அச் சிறப்பெலாம்
தேய்ந்து - அவை உலர்வதற்காக அகில் முதலியவற்றால்
புகையுண்டாக்கும் சிறப்பெலாம் குறைந்து, தாமத் தூமலர் தருப்பைகள்
சமிதைகள் விரித்த ஒமத் தூபமே - மாலையாகத் தொடுத்த மலர்களும்
தருப்பைப் புல்லும் சமிதை என்னும் விறகுகளம் நிறைந்த ஓமம்
வளர்க்கும் புகையே, உயர் மனை எல்லாம் ஓங்கின - உயர்ந்த வீடுகள்
எல்லாவற்றிலும் நிறைந்தன.

     இல்லறத்து வாழ்வார் இன்பந்துய்த்தற்கிடமாகிய அகிற்புகை முதலிய
நீங்கித் துறவறத்தார்க்குரிய ஓமப்புகைகளே உயர்ந்தன என்று முனிவர்
ஆட்சியைச் சிறப்பித்தார் என்க.
                                                   (132)

 
751.

தோலி னோர்களும் துரகதத் தோர்களும் சோதி
வேலி னோர்களும் மாதரும் மிடைந்தமை மாறி
நூலி னோர்களும் நுண்ணிடைக் கவுந்தியர் களுமுக்
கோலி னோர்களும் மலிந்தனர் கொடித்தெரு வெல்லாம்.

     (இ - ள்.) கொடி தெரு எல்லாம் - கொடி கட்டிய தெருக்கள்
எல்லாம், தோலினோர்களும் துரகத்தத்தோர்களும் - யானை வீரர்களும்
குதிரை வீரர்களும், சோதி வேலினோர்களும் மாதரும் மிடைந்தமை மாறி
- ஒளிமிக்க வேற்படையுடைய வீரர்களும் பெண்களும் நிறைந்திருந்த
நிலை மாறி, நூலினோர்களும் நுண் இடை கவுந்தியர்களும் - மறைநூலை
ஓதும் அந்தணர்களும் ஒருவகைத் தவநெறியுடைய நுட்பமான
இடையினையுடைய பெண்களும், முக் கோலினோர்களும் மலிந்தனர் -
முக்கோல் பிடித்த துறவிகளும் நிறைந்தனர்.