பக்கம் எண் :


374

தன்மையோடு அவ்வறம் நன்மையாக நடவாதிருப்பதற்குக் காரணம்
என்ன, எல்லார்க்கும் உளது ஆகில் - அறம் எல்லோருக்கும் நன்மை
செய்வதாய் இருக்குமானால், எங்கோனுக்கு இலையானது என்னோ என்பார்
- எங்கள் வேந்தனுக்குப் பயன் தராது போனது என்ன காரணமோ என்று
கூறுவார்கள்.

     அல் - இருள். ஆர்க்கும் - நிறைக்கும். இருளை நிறைவித்த கூந்தல்
எனக் கொள்க. அன்றியும் உவமவுருபாகவும் கொள்ளலாம். ஆர என்பது
உவமவுருபு எனப் பேராசிரியர் இளம்பூரணர் கூறுவது காண்க. அறம்
பொதுவானது. அது சிலர்க்கு நன்மையும் சிலர்க்குத் தீமையும் செய்வது
ஏன்? என்பது கருத்து.
                                                     (8)

 
761. கொண்டிருந்த வளநாடும் குறையாத பெருந்திருவும்
   கொடித்திண் டேரும்
பண்டிருந்த மாளிகையும் பரிசனமும் தமக்களித்துப்
   பால னோடும்
வண்டிருந்த தாரானும் வாணுதலும் வறியோர்போல்
   வனத்தே போகக்
கண்டிருந்தும் விலக்காத கௌசினார் தம்மனமும்
   கல்லோ என்பார்.

     (இ - ள்.) கொண்டிருந்த வள நாடும் - தனக்கு உரிமையாகக்
கொண்டிருந்த வளமான நாட்டையும், குறையாத பெருந்திருவும் குறையாத
பெருஞ்செல்வத்தையும், கொடி திண் தேரும் - கொடி கட்டிய வலிய
தேரையும், பண்டு இருந்த மாளிகையும் - முன்பு தான் தங்கி இருந்த
அரண்மனையையும், பரிசனமும் தமக்கு அளித்து - ஊழியர் முதலான
துணைவர்களையும் தமக்கே கொடுத்துவிட்டு, பாலனோடும் வண்டு இருந்த
தாரானும் வாள் நுதலும் - தன் இள மைந்தனோடும் வண்டுகள்
மொய்க்கும் மாலை அணிந்த மன்னனும் ஒளி பொருந்திய
நெற்றியையுடைய மனைவியும், வறியோர் போல் வனத்தே போக -
ஏழைமக்கள்போலக் காட்டிற்குச் செல்ல, கண்டிருந்தும் விலக்காத
கௌசிகனார் தம் மனமும் கல்லோ என்பார் - பார்த்திருந்தும் விலக்கி
நாட்டிற் சேர்த்து நன்மைசெய்யாத கௌசிகமுனிவனுடைய மனமும்
கல்லோ என்பார்கள் (சிலர்.)

     இத்துணைச் செல்வங்களையும் வாரி வழங்கிய மன்னனுக்கு நல்லுரை
கூறி ஒரு மனையளித்துத் தங்கும்படி செய்யாத கோசிகனார் மிகவும்
வன்கண்மையுடையவர்; இரக்கம் சிறிதுமில்லாதவர் என்றும் சிலர் ஏசினர்
என்க.
                                                     (9)

 
762. செம்மையினால் உலகமெலாம் தனக்களித்துச் செறிவனத்தே
   தேம்பிச் செல்வோர்
தம்மைவர வழைத்திருத்தி ஒருமனைக்குத் தலமீயாத்
   தறுகட் பாவி