பக்கம் எண் :


378

இனி எக்காலமும் வாரேன் என்று உறுதியாகக் கூறினன்.
                                                    (14)

 
767. முன்செய்த தீவினையோ முனிசெய்த உபகாரம்
   முன்உண் டாகப்
பின்செய்த கைம்மாறோ பேரரசு கொடுத்தகன்று
   பெருங்கா டெய்த
மின்செய்த நெடுவேலாய் மெய்த்தவனை யாம்துரந்து
   விட்டே மாகில்
என்செய்வான் எனஉரைப்பார் யாம்போதும்
                           அவன்போருக்
   கெதிர்க்க என்பார்.

     (இ - ள்.) மின் செய்த நெடு வேலாய் - ஒளிவீசுகின்ற நீண்ட
வேலையுடையவனே!, முன் சேய்த தீவினையோ - நாங்கள் முற்பிறவிகளில்
செய்த தீவினைதானோ, பேர் அரசு கொடுத்து அகன்று பெருங்காடு எய்த
- பெரிய அரசாட்சியை நீ முனிவரிடம் கொடுத்து நீங்கிப் பெரிய
காட்டிலே அடைந்து வாழ, முனீ செய்த உபகாரம் முன் உண்டாக -
முனிவர்க்கு நீ செய்த உதவி முன்னே இருக்க, பின் செய்த கைம்மாறோ
- அவன் பிறகு உனக்குச் செய்த மாற்றுதவி இது தானோ, மெய்த்தவனை
யாம் துரந்து விட்டேமாகில் - உண்மைத் தவம் செய்த முனிவனை யாம்
துரத்திவிட்டோமானால், என் செய்வான் - அவன் என்னசெய்வான், என
உரைப்பார் - என்று கூறுவார்கள், அவன் போருக்கு எதிர்க்க யாம்
போதும் என்பார் - அவனைப் போரிலே எதிர்த்துத் துரத்த யாம்
இப்போதே போகின்றோம் என்றும் கூறினார்கள்.

     'நீ நாடு துறந்து காடு செல்வது நாங்கள் செய்த தீவினையோ
அல்லது விசுவாமித்திரன் செய்த கைம்மாற்றுதவியோ நாம் அறியோம்.
அவனைத் துரத்திவிடுகின்றோம்; நீ வருக' என்றும் குறிப்புக் காட்டுவார்
சிலர்.
                                                    (15)

 
768. தோல்ஏந்தும் மார்பில்மலர்த் தொடைஏந்தத் தருப்பைமுடிச்
   சுருக்கத் தோடே
கோலேந்தும் குறுங்கைகதிர் வேலேந்தக் கனகமுடி
   கோடீ ரத்தின்
மேலேந்தி இருடிஇருந் துலகாள அவன்குடைக்கீழ்
   வீணே அன்னான்
காலேந்தி வாழ்வதின்யாம் கனல்மூழ்கல் அமையும்எனாக்
   கட்டு ரைப்பார்.

     (இ - ள்.) தோல் ஏந்தும் மார்பில் மலர்த் தொடைஏந்த - மான்
தோலைப் பூணுகின்ற மார்பில் மலர்மாலை சூடியும், தருப்பை முடி
சுருக்கத்தோடே கோல் ஏந்தும் குறுங் கை - தருப்பைப்புல் முடிச்சுகளுடன்
முக்கோலைப் பிடிக்கின்ற குறுகிய கை, கதிர் வேல் ஏந்த - ஒளிமிக்க