|
கண்டோர்
கூற்று |
932. |
சோதித்திரு
முடியானிவை சொல்லச்சுடர் மாட
வீதித்தலை நின்றோர்சிலர் மிகவும்மன மழலாப்
போதிற்றிரு வனையாளிவ டனையும்புதல் வனையும்
ஏதிப்படி விலைகூறிட வெய்தும்திற மென்பார். |
(இ
- ள்.) சோதித் திரு முடியான் இவை சொல்ல - ஒளிமிக்க
அழகிய முடியையுடைய மன்னன் இவ்வாறு சொல்லியவுடன், சுடர் மாட
வீதித் தலை நின்றோர் சிலர் - ஒளிவீசும் மாடங்களிலும் தெருக்களிலும்
நின்றவர் சிலர், மிகவும் மனம் அழலா - மிகவும் மனம் கொதித்து,
போதில் திரு அனையாள் இவள் தனையும் புதல்வனையும் -
செந்தாமரைமலரில் வாழும் திருமகளைப்போன்ற இப் பெண்ணையும்
மைந்தனையும், ஏது இப்படி விலை கூறிட எய்தும் திறம் என்பார் -
என்ன காரணம் இப்படி விலைகூறுவதற்கு வந்தது என்று ஒருவருடன்
ஒருவர் பேசி நின்றனர்.
தெருவில்
நின்ற சிலர் 'திருமகள் போன்ற இவளையும் செல்வப்
புதல்வனையும் இவன் விற்பதற்குக் காரணம் யாது?' என்று ஆய்ந்து
வினவினர் ஒருவரை யொருவர் என்க.
(26)
933. |
செருவுற்றக
ணயிலைப்பொரு திருஒப்பவ ளிவளும்
மருவுற்றணி தெரியற்புய மதனொப்பவன் மகனும்
ஒருவர்க்குறு விலையிற்பொரு ளுடையார்களு முளரோ
இருவர்க்குறு விலைஇப்பதி எவர்நல்குவ ரென்பார். |
(இ - ள்.) செரு உற்ற கண் அயிலைப்
பொரு திரு ஒப்பவள்
இவளும் - போருக்குரிய வேல்போன்ற கண்களையுடைய திருமகளைப்
போன்ற இவளும், மரு உற்று அணி தெரியல் புய மதன் ஒப்பவன் மகனும்
- மணம் பொருந்திய மாலை அணிந்த புயங்களையுடைய மன்மதன்
போன்ற இம்மன்னனுடைய மகனும், ஒருவர்க்கு உறு விலையிற் பொருள்
உடையார்களும் உளரோ - ஒருவர்க்குரிய விலைகொடுத்தற்குப் பொருள்
உடையவர்களும் இவ்வூரில் உளரோ, இருவர்க்கு உறு விலை இப் பதி
எவர் நல்குவர் என்பார் - இருவர்க்கும் உரிய விலை கொடுத்து
வாங்குதற்குரிய பொருள் உடையோர் இவ்வூரில் எவர் இருக்கின்றார்
என்றார்.
இலக்குமிபோன்ற அழகுடையவள் இவள்; புதல்வனும்
காமனைப்
போன்ற கட்டழகுடையவன். இவர்களில் ஒருவரை விலைக்கு வாங்கும்
பொருளுடையவர்கூட இந்நகரில் இரார். இருவரையும் எவர் வாங்குவர்
என்றும் கலந்து பேசினர் சிலர் என்பது.
(27)
934. |
தவருக்கல
தயிராவத மெனுநீள்கர சைலத்
தவருக்கல தளகாபுரி அரசுக்கல தலைசேர்
உவரிக்கடல் புடைசூழ்விய னுலகத்திடை உறுவார்
எவருக்கெளி திவருக்குறு விலைநல்குவ தென்பார். |
|