வீரவாகு
என்பவன் ஒரு குடம் கட்குடித்து மயங்கியிருந்தான்.
அதனாற் கால் கைகள் நடுங்கின; தோளிற் காவடி சுமந்து வந்தான்; அக்
காவடியின் இருபுறமும் தோலும் தசையும் தொங்கின. புலையன் நிலைமை
இவ்வாறு எனக் காண்க.
(52)
959. |
சுமக்கும்
காவைத்துத் தூசொடு வாய்புதைத்
துமக்கு வேண்டு முறுபொரு ணல்கிடின்
அமைக்கும் புன்றொழி லாளரெம் போல்பவர்
தமக்கும் விற்கத் தகுதிஉண் டோவென்றான். |
(இ - ள்.) சுமக்கும் கா வைத்து
தூசொடு வாய் புதைத்து -
சுமக்கின்ற காவடியை வைத்துவிட்டு ஆடையினால் வாயை மூடிக்
கொண்டு, உமக்கு வேண்டும் உறு பொருள் நல்கிடின் - உமக்கு
வேண்டிய மிகுந்த பொருளைக் கொடுத்தால், அமைக்கும் புன்
தொழிலாளர் எம் போல்பவர் தமக்கும் - பொருந்திய புன் தொழில்
புரியும் எம்போன்றவர்க்கும், விற்கத் தகுதி யுண்டோ என்றான் - விற்க
விரும்புவீர்களோ? என்றான்.
அப் புலையன் காவடியை இறக்கிவைத்தான்; ஆடையால்
தன்
வாயைப் பொத்திக்கொண்டு 'என்போன்ற புலையர்க்கும் பொருள்
கொடுத்தால் இவரை விலைக்குக கொடுப்பீர்களோ?' என்று வினவினான்
என்பது.
(53)
|
அரசன்
தன்னை அப்புலையற்கு விற்குமாறு கூறுதல் |
960. |
அன்ன தன்மை
அரசன் மனம்கொளா
அந்ந கர்க்கு ளிவனல தெம்விலைப்
பொன்ன ளிப்பவ னில்லெனப் புந்திவைத்
தென்னை வில்லென் றமைச்சற் கியம்பினான். |
(இ
- ள்.) அன்ன தன்மை அரசன் மனம் கொளா -
அத்தன்மையை அரசன் மனத்தில் நினைத்து, எம் விலைப் பொன்
அளிப்பவன் - எம்மை விலைக்குப் பெற்றுப் பொன்னைக் கொடுப்பவன்,
இந் நகர்க்குள் இவன் அலது இல் என - இந்த நகரத்தினுள் இவன்
அல்லாது வேறு ஒருவரும் இல்லை என்று, புந்தி வைத்து - மனத்தால்
அறிந்து, என்னை வில் என்று அமைச்சற்கு இயம்பினான் - என்னை
இவனுக்கே வில் என்று அமைச்சனிடங் கூறினான்.
அப்
புலையனியம்பியதை மனத்திற் சிந்தித்தான் அரிச்சந்திரன்,
'இவனொருவனைத் தவிர வேறு எவரும் இதுகாறும் வந்து விலை
கேட்டிலர்; ஆதலால் இவனுக்கே நாம் விலைப்படுவது தகுதி' என்று
'இவனுக்கே என்னை விற்றுவிடு' என்றான்.
(54)
|
வீரவாகு
'என்ன விலை?' எனக் கேட்டலும்
மந்திரி
கூறுதலும்
|
961. |
ஆயி
னன்றென் றமைச்சனும் அவ்வயின்
மேயி னன்னினி விற்ப னுனக்கென்றான் |
|