உடன்வந்த
சிறார்கள் உயிர் நீங்கியது கண்டார்; பின்னும் புரட்டி
உருட்டிப் பார்த்தனர். உயிரில்லை என்றுணர்ந்து விதியை நொந்து
விறகுக்கட்டுகளை எடுத்துச் சுமந்து அவரவர் வீடுநோக்கிச் சென்றனர்
என்பது.
(8)
985. |
பாலர்வந்
தூரிற் புக்கார் பானுவும் கடலிற் புக்கான்
மாலைவந் திறுத்த பின்னர் வழியினை நோக்கி அன்னை
பாலன்வந் திலனென் றேங்கிப் பரதவித் திருகண் டாரை
காலநொந் துருவி வாயிற் கடைத்தலை வந்து பார்த்தாள். |
(இ - ள்.) பாலர் வந்து ஊரில்
புக்கார் - உடன் சென்ற
சிறுவர்கள் வந்து ஊரிலே புகுந்தார்கள், பானுவும் கடலிற் புக்கான் -
கதிரவனும் மேல்கடலிற் புகுந்தான், மாலை வந்து இறுத்த பின்னர்
அன்னை வழியினை நோக்கி - மாலைக்காலம் வந்து சேர்ந்தபிறகு
தாயாகிய சந்திரமதி வழியைப் பார்த்து, பாலன் வந்திலன் என்று ஏங்கிப்
பரதவித்து - சிறுவன் மைந்தன் வரவில்லையே என்று ஏக்கங் கொண்டு
மனம் தடுமாறி, இரு கண் தாரை கால நொந்து உருகி - இரண்டு
கண்களினின்றும் தாரைதாரையாகக் கண்ணீர் சிந்த மனம் வருந்தி உருகி,
வாயில் கடைத்தலை வந்து பார்த்தாள் - வாயிலின் முன் பக்கம் வந்து
பார்த்தாள்.
'மாலையில் வரவேண்டிய பாலன் இன்னும் வரவில்லையே!'
என்று
சந்திரமதி மயங்கித் தெருவில் வந்து சிறார் வருவாரை நோக்கி நின்றாள்
என்க; கண் + தாரை = கண்டாரை, கண் தாரை. கால - கண்கள்
மழைத்தாரை போல நீர் சிந்த. தலை - முன்னிடம்.
(9)
|
மைந்தனிறந்ததை
வந்த சிறார் சந்திரதிக்குச் கூறல் |
986. |
வணங்கிய
கரத்தாள் சால வாடிய மனத்தாள் மக்காள்
இணங்கியும் முடனே வந்த வென்மக னெங்கே என்றாள்
மணங்கமழ் குழலா யுன்றன் மைந்தனை அரவு தீண்டி
உணங்கியே இறந்தா னென்றா ருயிர்த்திலண் மறுகி வீழ்ந்தாள். |
(இ
- ள்.) வணங்கிய கரத்தாள் - தளர்ந்த கைகளையுடையவள்,
சால வாடிய மனத்தாள் - மிகவும் வாடிய மனத்தை யுடையவள், மக்காள்
இணங்கி உம்முடனே வந்த என் மகன் எங்கே என்றாள் - பிள்ளைகளே
உம்முடனே சேர்ந்து வந்த என் மகன் எங்கே என்றாள், மணம் கமழ்
குழலாய் உன்றன் மைந்தனை அரவு தீண்டி - மணம் வீசும்
கூந்தலையுடைய பெண்ணே! உன் மகனைப் பாம்பு கடித்து, உணங்கியே
இறந்தான் என்றார் - வருந்தி இறந்தான் என்றனர், உயிர்த்திலள் மறுகி
வீழ்ந்தாள் - மூச்சும் விடாதவளாய் மயங்கி அவள் விழுந்தாள்.
சிறார்களைக்
கண்டாள்; கைகுவித்து வணங்கி மனம் வாடி
'உங்களுடன் வந்த என் மகன் எங்கே?' என்று வினவினள். அவர்கள்
'உன் மகனை அரவு தீண்டிற்று; ஆவி நீங்கிற்று, நாங்கள் போட்டுவிட்டு
வந்தோம்' என்றனர். கேட்டவுடன் மயங்கி விழுந்தாள்.
(10)
|