(இ
- ள்.) அடிமையே எனினும் ஐயா அந்தரத்து இறந்தான்
என்றால் - நான் அடிமையே என்றாலும் ஐயனே! யாருமில்லாத வனத்தில
இறந்துகிடக்கின்றான் என்றால், கொடியனேன் தனக்குப் பெற்ற வயிறுதான்
கொதித்திடாதோ - கொடிய பாவியாகிய எனக்குப் பெற்ற வயிறு
கொதிக்காதோ!, படியின்மேல் இறந்தான் தன்னைப் பார்த்து எடுத்து
அடக்கி - தரையிலே இறந்துகிடக்கின்றவனைப் பார்த்து எடுத்து
அடக்கஞ்செய்துவிட்டு, கங்கல் விடியுமுன் வருவேன் நல்கு விடை எனத்
தொழுது வீழ்ந்தாள் - இராப்பொழுது விடிவதற்கு முன் வருவேன்
விடைகொடு என்று வணங்கி வீழ்ந்தாள்.
'ஐயனே!
நான் அடிமை; என் மைந்தனும் அடிமை என்றாலும்
தனியே வனத்திலிறந்து கிடக்கின்றான் என்றால் என் மனம்
கொதிக்குமல்லவா? தாயின் நிலைமை தெரியாமல் இவ்வாறு கூறலாமா?
அடக்கஞ்செய்து வருகிறேன்; விடை தருக' என்று மீண்டும் காலில்
விழுந்தாள்.
(15)
|
மறையோன்
விடைபெற்றுச் சந்திரமதி வனம் போதல் |
992. |
மாலையங்
குழலாள் கூற மறையவன் மனம்பொ ருந்தி
வேலைகண் மிகவு முண்டு விடியுமுன் வருவா யாகில்
நீலவேல் விழியா யேகு நீயென ஒருகாற் சொன்ன
காலையே எழுந்தி ருந்து கடிநகர் கடந்து போனாள். |
(இ - ள்.) மாலை அம் குழலாள்
கூற மறையவன்
மனம்பொருந்தி - மாலை அணிந்த கூந்தலையுடைய சந்திரமதி கூறியவுடன்
மறையவன் மனம் ஒத்து, வேலைகள் மிகவும் உண்டு விடியுமுன்
வருவாயாகில் - இங்கு வீட்டு வேலைகள் மிகுதியாக இருக்கின்றன,
பொழுது விடிவிதற்குமுன் நீ வருவாயானால், நீல வேல் விழியாய் ஏகு நீ
என - நீல மலரும் வேலும் போன்ற கண்களையுடையவளே! நீ செல்
என்று, ஒருகால் சொன்ன காலையே - ஒருதடவை சொன்ன உடனே,
எழுந்திருந்து கடி நகர் கடந்து போனாள் - எழுந்து காவலோடு கூடிய
நகரத்தைக் கடந்து அவள் சென்றாள்.
மறையவன் மனமிரங்கி விடை தந்தான், உடனே புறப்பட்டு
நகரத்தைக் கடந்து காரிருளிற் றனிவழியே சென்றனள் சந்திரமதி.
(16)
|
இறந்த
மைந்தனைத் தேடி இடர்ப்படுதல் |
993. |
பாவியேன்
மகனே என்பள் பதைப்பள்மென் முகத்தின் மோதித்
தாவியே விழுவள் நின்று தயங்கியே மயங்கி வீழ்வாள்
காவியம் கண்ணீர் பாயக் கதறுவள் பதறி ஏங்கி
ஆவியைத் தேடித் தேடி அலமரும் உடல மொத்தாள். |
(இ
- ள்.) பாவியேன் மகனே என்பள் பதைப்பள் - பாவியாகிய
என் மகனே என்பாள் மனம் துடிப்பாள், மென் முகத்தின் மோதித்
தாவியே விழுவள் - மென்மையான முகத்திலே மோதிக்கொண்டு தாவி
விழுவாள்;
|