"இரப்பாரை
யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று." (குறள்.
1018)
மட்டும் - அளவும்.
இது சூடிய அளவிலிருந்து இதுவரை என்று கொள்க.
"கொடுப்பார்க்கு இரப்பாரில்லாத குறையொன்றுளது கூறுங்கால்" என்பது
ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. அன்றியும் "வண்மை யில்லையோர் வறுமை
யின்மையால்" என்பதும் "கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களு மில்லை
மாதோ" என்பதும் நோக்குக.
(16)
|
அயோத்தியில்
இடும்பை இல்லை |
90. |
கற்றி
டும்கொலைக் கண்கண்டு காமுகர்
முற்றி டும்பையும் மோட்டிளங் கொங்கையால்
இற்றி டும்மருங் கென்னும் இடும்பையும்
மற்றி டும்பையம் மண்டலத் தில்லையால். |
(இ
- ள்.) கற்றிடும்
கொலைக்கண் கண்டு - கண்டார் உயிர்
உண்ணும் தொழில் பயின்றிடும் பெண்களின் கண்களைக் கண்டு, காமுகர்
முற்று இடும்பையும் - காமுறுகின்றவர்கள் அம் மங்கையர்களையே
வளைகின்ற துன்பமும், மோட்டு இளங் கொங்கையால் - பருத்த
இளமையான கொங்கைகளின் கனத்தாலே, மருங்கு இற்றிடும் என்னும்
இடும்பையும் - இடை ஒடிந்துபோகும் என்னும் துன்பமும்
(அங்கு உள்ளன), மற்று இடும்பை அம் மண்டலத்து இல்லை -
(இவை யன்றி) வேறு எத்துன்பமும் அந் நகரத்தில் இல்லை.
உம்மைகள்
எண்ணும்மைகள். இச் செய்யுளும் ஒழித்துக்காட்டணி.
ஆல் : அசை. காமுகர் முற்று இடும்பையும் இற்றிடும்........ என்னும்
இடும்பையும் ஆங்கு உள்ளன எனப் பயனிலை வருவித்து முடிக்க. மற்று
- பிறிது என்னும் பொருளில் நின்றது. அவ்விரண்டு இடும்பைகளும் அன்றி
வேறு இடும்பைகள் என்று விரித்துப் பொருள் கொள்க. எனவே வறுமை
பசி நோய் முதலிய இடும்பைகள் இல்லை யென்பது கருத்து.
(17)
|
அயோத்தியில்
பயமின்மை |
91. |
இபம
ருப்பெனக் கொங்கை சுமந்திடை
தபமு ரிந்திடும் தக்கதன் றீதெனா
உபய பாதத்திற் கொண்பொற் சிலம்பிடும்
அபயம் அன்றி அபயமற் றில்லையே. |
(இ
- ள்.) இப மருப்பு எனக் கொங்கை சுமந்து இடை தப
முரிந்திடும் ஈது தக்கதன்று எனா - யானைக்கொம்பு போன்ற
தனங்களைச் சுமந்து இடை மிகுதியாக முரிந்திடும் இது தக்கதல்ல என்று,
உபயபாதத்திற்கு ஒண் பொற்சிலம்பு இடும் அபயம் அன்றி - இரண்டு
பாதங்களிலும் ஒளிபொருந்திய பொன் சிலம்பு அபயமிட்டு ஒலிப்பதல்லால்,
மற்று அபயம் இல்லை - வேறு அபயக்குரல் அந் நாட்டில் இல்லை.
|