பக்கம் எண் :


528

1089. மறையோ னிடத்திவளை விலைகூறி மிக்கவொரு
   மகனோடும் விற்றவ னிவன்
குறையோ பொருட்செலவு தெரியாது மற்றுமொரு
   கொடியோன் அலக்கண் உறவே
பறையோ னிடத்திவனை விலைகூறு விற்றுமுளன்
   பலநாள் கழித்த தறிவேம்
இறையோன் மகற்கிறுதி செயலால் இவர்க்குவரும்
   இடையூறி(து) என்றுரைசெய் வார்.

     (இ - ள்.) மறையோன் இடத்து இவளை விலை கூறி மிக்க ஒரு
மகனோடும் விற்றவன் இவன் - ஒரு பிராமணனிடத்தில் இவளை விலை
கூறி ஒரு மகனோடும் விற்றவன் இவன்தான், குறையோ பொருட் செலவு
தெரியாது - இவர்களுக்கு வந்த குறை என்னவோ? என்ன பொருள்
செலவோ தெரியாது, மற்றும் ஒரு கொடியோன் அலக்கண் உறவே
பறையோன் இடத்து இவனை விலை கூறி விற்றும் உளன் - வேறு ஒரு
கொடியவன் இவன் துன்பப்படும்படி பறையனிடத்தில் இவனை விலை
கூறி விற்றிருக்கின்றான். பல நாள் கழித்தது அறிவேம் - இவை நடந்து
பல நாட்களாயின நங்கள் அறிவோம், இறையோன் மகற்கு இறுதி
செயலால் இவர்க்கு வரும் இடையூறு இது என்று உரை செய்வார் -
மன்னனுடைய மகனைக் கொன்றதனால் இவர்களுக்கு வந்த இடையூறு
இது என்று கூறுவார்கள்.

     'ஒரு மறையோனுக்கு இவளையும் இவள் மகனையும் பல நாட்க
ளுக்குமுன் விற்றவன் இவன்தான்; இவனை யொருவன் விலை கூறிப்
பறையனுக்கு விற்றுவிட்டான்; இச்செய்தி எங்கட்குத் தெரியும்; காரணம்
என்னோ அறியோம்! நம்மரசன் மகனைக் கொன்றதனால் இந்த விதி
இவளுக்கு வந்ததுபோலும்! என்றும் சிலர் கூறுவர்.
                                                   (113)

 
1090. எங்கோ மகன்கதற உயிருண்ட கொலைகாரி
   இவளோ எனத்தொ டருவார்
வெங்கோப வன்கரியின் முன்போடும் என்றுசிலர்
   வெகுள்வார் நெருக்கி யடர்வார்
பங்கோ பறைக்கிவளை வதைசெய்தல் நம்படை
   படாதோ எனப்ப தறுவார்
செங்கோல் முறைக்குவழு நீர்கொல்வ தென்றுசிலர்
   செயலால் விலக்கி வருவார்.

       (இ - ள்.) எம் கோ மகன் கதற உயிர் உண்ட கொலைகாரி
இவளோ எனத் தொடருவார் - எம் மன்னன் மகன் கதறி அழும்படி
உயிர்க்கொலை செய்த கொலைகாரி இவள்தானோ எனத் தொடர்ந்து
செல்வார்கள், வெங் கோப வன் கரியின் முன் போடும் என்று சிலர்
வெகுள்வார் - கொடிய கோபத்தையுடைய வலிய யானையின் முன்
போடுங்கள் என்று சிலர் கோபங்கொள்வார்கள், நெருக்கி அடர்வார் -
சிலர் நெருக்கி வருத்துவார்கள், பறைக்கு இவளை வதை செய்தல்
பங்கோ - பறையன் இவளை வதைசெய்யும்படி செய்தல் உரிமையோ,
நம் படை படாதோ எனப்