எழுவாள்" என்பது திருக்குறள்.
இதனால் சந்திரமதி தன் கணவனையே
குலதெய்வமாகக் கொண்டு வணங்கினள் எனக் கொள்க.
(133)
1110. |
பொருந்து
நீத்தத்திற் புற்புத வாழ்வைநீ மெய்யென்(று)
அருந்த வத்தையும் அறத்தையும் மெய்யையும் விடுத்து
வருந்தல் மன்னவ வழிவழி சிறக்கென வாழ்த்தி
இருந்த பின்சுடர் வாட்படை வலக்கையில் எடுத்தான். |
(இ - ள்.) பொருந்தும் நீத்தத்தில்
புற்புத வாழ்வை நீ
மெய்யென்று - பொருந்திய தண்ணீரில் தோன்றும் குமிழியைப் போன்ற
நிலையற்ற வாழ்வை நீ உண்மையென்று கருதி, அருந்தவத்தையும்
அறத்தையும் மெய்யையும் விடுத்து - அருமையான தவத்தையும்
தருமத்தையும் உண்மையையும் விட்டுவிட்டு, வருந்தல் மன்னவ -
மன்னவனே! வருந்தாதே, வழிவழி சிறக்க என வாழ்த்தி - நீ மரபு
வழிவழியாகச் சிறப்புப்பெற்று வாழ்வாயாக என்று வாழ்த்தி, இருந்த பின்
- கிழக்குமுகமாக நின்றபின், சுடர் வாட்படை வலக் கையின் எடுத்தான்
- ஒளி வீசும் வாட்படையை வலக்கையிலே மன்னன் எடுத்தான்.
சந்திரமதி 'உலகவாழ்வை நிலையாகக் கருதி மயங்காமல்
அறமும்
வாய்மையும் தவறாது என்னை வெட்டுக!' என்று கூறி, 'வழிவழி சிறக்க'
என வாழ்த்தி அமர்ந்தாள். மன்னன் வலக்கரத்தில் வாள் எடுத்தான்
என்பது.
(134)
|
அரிச்சந்திரன்
கடவுளைத் துதித்தப் பின் வெட்டுதல் |
1111. |
உலகு யிர்க்கெலாம்
பசுபதி ஒருமுதல் ஆயின்
அலகில் சீருடை அவன்மொழி மறையெனின் அதன்கண்
இலக றம்பல வற்றினும் வாய்மையீ டிலதேல்
விலகு றாமலவ் வாய்மையை விரதமாக் கொளின்யான். |
(இ
- ள்.) உலகு உயிர்க் கெலாம் பசுபதி ஒரு முதல் ஆயின் -
உலகத்தில் உள்ள உயிர்களுக்கெல்லாம் சிவபெருமான் ஒரு முதற்
கடவுள் என்பது உண்மையானால், அலகில் சீர் உடை அவன் மொழி
மறை எனில் - அளவில்லாத சிறப்பினையுடைய அவன் மொழிந்த நூலே
மறை நூல் என்பது உண்மையானால், அதன்கண் இலகு அறம்
பலவற்றினும் வாய்மை ஈடு இலதேல் - அதன்கண் விளங்குகின்ற
அறங்கள் பலவற்றினும் உண்மை பேசுதலே ஒப்பில்லாத அறம் என்றால்,
விலகுறாமல் அவ் வாய்மையை விரதமாக் கொளின் யான் - நீங்காமல்
அவ்வுண்மை பேசுதலை நான் விரதமாகக் கொண்டால்,
பசுபதி
- உயிர்கட்குத் தலைவன் (சிவன்) 'சிவனே எவ்வுயிர்க்கும்
இறைவன்! அவனாற் கூறப்பட்டதே மறைகள்! அம் மறையிற் கூறும்
அறங்களிற் சிறந்தது வாய்மையே! அவ்வாய்மையை நான் விரதமாகக்
கொண்டவனானால்' என்பது. இது அடுத்த கவியிற் சென்று முடியும்.
(135)
|