|
| 1126. |
வந்த தேவரைக்
கண்டரிச் சந்திரன் மகிழ்ந்தே
எந்த மாதவம் என்னையோ என்னையோ என்னாச்
சிந்தை யுட்பெருகு ஆனந்தப் பெருவெள்ளம் தேக்கி
புந்தி யாங்கரை பொடிபடப் புடைத்ததை யன்றே. |
(இ
- ள்.) அரிச்சந்திரன் வந்த தேவரைக் கண்டு மகிழ்ந்தே -
அரிச்சந்திரன் அங்கு வந்த தேவர்களையெல்லாம் கண்டு மகிழ்ந்து,
எந்தம் மாதவம் என்னையோ என்னையோ என்னா - எங்களுடைய
பெரிய தவம் என்ன சிறப்புடையது! என்ன சிறப்புடையது! என்று,
சிந்தையுள் பெருகு ஆனந்தப் பெரு வெள்ளம் தேக்கி - மனத்தினுள்
பெருகிய மகிழ்ச்சி என்னும் பெருவெள்ளம் நிறைந்து, புந்தியாம் கரை
பொடி படப் புடைத்தது - புத்தி என்னும் பெரிய கரை பொடியாகும்படி
தாக்கியது.
புடைத்ததை,
ஐ : சாரியை. அன்று, ஏ : அசைநிலை. மகிழ்ச்சிப்
பெருக்கு புத்தியை அழிக்க முயன்றது என்பது, மன்னன் மகிழ்ச்சியால்
தன்னைமறந்தான் என்ற கருத்தை உணர்த்துகின்றது. சிந்தை ஒரு
பொய்கையாகவும், ஆனந்தம் நீராகவும், புந்தி கரையாகவும்
உருவகப்படுத்தப்பட்டது. இஃது உருவகவணி.
(14)
| |
அரிச்சந்திரன்
வந்தவர்களை வணங்குதல் |
| 1127. |
தொழுத
னன்றொழு தெழுந்தனன் அடிமுடி தொடங்கி
முழுதும் முற்றிய உவகையம் பெருங்கடல் மூழ்கிப்
புழுதி யாடினன் கருணையங் கண்ணினீர் பொழிய
அழுது வீழ்ந்தனன் செய்தவம் இன்னதென் றறியான். |
(இ - ள்.) தொழுதனன் தொழுது எழுந்தனன்
- அரிச்சந்திரன்
வணங்கினான் வணங்கி எழுந்தான், அடிமுடி தொடங்கி முழுதும் முற்றிய
உவகையம் பெருங் கடல் மூழ்கி - தன் அடி முதல் முடி வரை உடல்
முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் முழுகி, புழுதி ஆடினன் - தரையிலே
விழுந்து வணங்கித் தன் உடம்பெல்லாம் புழுதி படியும்படி செய்தான்,
கருணையம் கண்ணின் நீர் பொழிய அழுது வீழ்ந்தனன் செய் தவம்
இன்னதென்று அறியான் - கருணையோடுகூடிய கண்ணீர் வெள்ளம் சிந்த
அழுது வீழ்ந்தான் தான் செய்த தவத்தின் பெருமை யாது என்று அறியாது
இருந்தான்.
அரிச்சந்திரன் மகிழ்ச்சிக் கடலில் முழுகினான்.
பின்பு தரையில்
விழுந்து புழுதியிற் புரண்டான்; கண்ணீர் வெள்ளம் பொழிய அழுது கீழே
வீழ்ந்தான்; ஒன்றும் அறியாமல் மயங்கினான் என்க.
(15)
| 1128. |
நாரி பாகனை
முகுந்தனை நான்முகத் தோனை
மூரி வேலனை விநாயக மூர்த்தியைப் பணிந்தான்
பூரை பூரையென் றிருகையால் அமைத்தபுத் தேளிர்
யாரை யாரையென் றறிந்தியாம் விளம்புதும் அம்மா. |
|