பக்கம் எண் :


55

     (இ - ள்.) ஆகம் மிசை தங்கும் மணி ஆரமும் - மார்பில்
பொருந்தியுள்ள இரத்தின மாலைகளும், அவற்றின் பாக மிசை -
அவைகளின் நடுவே, சோதி விரி பன் மணியும் மின்ன - பரந்த ஒளி
பொருந்திய பலவகையான மணிகளும் ஒளி வீச. கோகனக மங்கையொடு
கொற்றவையும் அம்பொன் வரகு வலயங்களும் மணிப் புயம் இலங்க
- செந்தாமரையிலிருக்கிற திருமகளும் வெற்று மகளும் அழகிய
பொன்னாலாகிய தோளணிகளும், அழகிய தோள்களில் விளங்க;

     ஆகம் - மார்பு. புயம் - தோள். மணி ஆரம் - முத்து மாலையுமாம்.
புயத்தல் திருமகளும் கொற்றவையும் தோள் வளை என்னும் அணியும்
விளங்கின என்க. கொற்றவை - காளி, தூர்க்கையும் ஆம். இருவரும்
வீரமங்கையர் என்பர். கோகனகம் - தாமரை, மின்ன, இலங்க என்ற
எச்சங்கள் இருந்தான் (31, கவி) என்ற வினைமுற்றைக் கொண்டு முடியும்.
                                                    (26)

 
100. சோமனை முடித்தருள் உமாபதி சுடாத
காமனிவன் என்னஒளிர் கட்டழ கிலங்க
மாமகர குண்டலம் மணித்திருவில் வீசச்
சேமவுடை வாளதுதி ருக்கையில்இ லங்க

     (இ - ள்.) சோமனை முடித்து அருள் உமாபதி சுடாத காமன்
இவன் என்ன - சந்திரனைத் திருமுடிமேல் அணிந்து மேன்மேலும்
கலைகள் வளர அருள்புரிந்த உமையம்மையின் நாயகனாகிய
சிவபெருமானால் எரிக்கப்படாத மன்மதன் இவன் என்று சொல்லும்படி,
ஒளிர் கட்டழகு இலங்க - ஒளி விடுகின்ற உடம்பின் அழகு விளங்க,
மாமகர குண்டலம் மணித் திருவில் வீச - பெரிய மகரகுண்டலங்கள்
மாணிக்க ஒளிபோல் சிறந்த ஒளி செய்ய, சேம உடை வாள் அது
திருக்கையில் இலங்க - காவல் செய்கின்ற உடைவாளானது அழகிய
கையில் விளங்க;

     சந்திரனுக்குக் கலைகள் குறையும்படி தக்கன் சபித்தான். ஒளியிழந்த
சந்திரன் சிவபெருமானை அடைக்கலம் அடைந்தான். சிவபெருமான்
அவனைத் தலையிற்சூடி, மேலும்மேலும் கலைகள் வளரச் செய்தார்.
உமாபதி சுடாத காமன் இன்மையின் இல்பொருளுவமை யணி. உடைவாள்
அது - அது : பகுதிப்பொருள் விகுதி. கட்டு : யாக்கை எலும்பு நரம்பு
தசை முதலியவற்றால் கட்டப்பட்ட உடலுக்கு ஆகுபெயர். இலங்க, வீச,
இலங்க இவைகளும் இருந்தான் (31, கவி) என முடியும்.
                                                    (27)

 
     அரிச்சந்திரனுடைய சிவபத்தி
101. துடிப்படு கரத்தனடி யர்த்தொழுது நீற்றுப்
பொடிப்பட வடுப்படு கறுப்புநுதல் பொங்க
முடித்தலை உறத்திசை முகத்தரசர் உய்த்த
வடுப்படு கறுப்பிரு மலர்க்கழல்வி ளங்க.

     (இ - ள்.) துடிப்படு கரத்தன் - உடுக்கினை ஏந்திய கையையுடைய
சிவபெருமானின் அடியர்த் தொழுது - அடியார்களை வணங்கி வடுப்படு