|
அரிச்சந்திரனும்
சந்திரமதியும் காசி மன்னனும் அவர்தம் மக்கள்
இருவரும் களிப்படைந்தனர்; தேவரையும் மூவரையும் வணங்கினர்.
(22)
| |
மூவரும்
அரிச்சந்திரனைப் புகழ்தல் |
| 1135. |
மன்னர் மன்னனை
நோக்கியே மலர்க்கரம் அமையா
என்னை யோவெனா உருகித்தந் திருவுளம் இரங்கி
முன்னை யுத்தமர் எவருளும் முறைமைக்கும் நெறிக்கும்
உன்னை ஒப்பவர் இலரென மூவரும் உரைத்தார். |
(இ - ள்.) மன்னர் மன்னனை நோக்கியே
மலர்க்கரம் அமையா
- மன்னர் மன்னனாகிய அரிச்சந்திரனைப் பார்த்து மும்மூர்த்திகளும் தம்
மலர்க்கரங்களால் அவனை அமரச்செய்து, என்னையோ எனா உருகி தம்
திருவுளம் இரங்கி - என்ன கடுமையான சோதனை என்று கூறி மனம்
உருகி இரக்கங்கொண்டு, முன்னை உத்தமர் எவருளும் - உன் முன்னோர்
முதலான சிறந்த உத்தமர் யாவருள்ளும், முறைமைக்கும் நெறிக்கும்
உன்னை ஒப்பவர் இலர் என மூவரும் உரைத்தார் - நீதிமுறைப்படி
ஆட்சி செய்வதற்கும் நன்னெறியில் நடப்பதற்கும் உன்னைப் போன்றவர்
ஒருவரும் இல்லை என்று மூவரும் கூறினார்கள்.
மூவரும் அரிச்சந்திரனை நோக்கி மலர்க்கையாலமைத்து
நிறுத்தி,
'உன்னைப் போன்ற நெறிமுறை தவறாத நிருபர் இவ்வுலகில் ஒருவரும்
இலர்' என்று புகழ்ந்துரைத்தார்.
(23)
| |
மூவரையும்
அரிச்சந்திரன் முதலியவர் வணங்குதல் |
| 1136. |
தேவ
தேவர்கள் அருளிய திருமொழி கேளா
யாவர் இப்பயன் பெற்றவர் என்றுநைந் துருகிப்
பூவ ருங்குழல் வல்லியும் புதல்வரும் புருடர்
மூவ ரும்விழுந் தெழுந்துபன் முறைமுறை துதித்தார். |
(இ
- ள்.) தேவ தேவர்கள் அருளிய திருமொழி கேளா -
தேவர்களுக்குத் தலைவர்களாகிய மும்மூர்த்திகளும் அருளிய
நன்மொழிகளைக் கேட்டு, யாவர் இப் பயன் பெற்றவர் என்று நைந்து
உருகி - யாவர் இவ்வாறு நற்பயன் பெற்றவர்கள் என்று இளகி மனம்
உருகி, பூவருங் குழல் வல்லியும் புதல்வரும் புருடர் மூவரும் - மலரணிந்த
கூந்தலையுடைய சந்திரமதியும் பிள்ளைகள் இருவரும் அரிச்சந்திரன்
காசியரசன் அமைச்சனாகிய சத்தியகீர்த்தி என்னும் ஆடவர் மூவரும்,
விழுந்தெழுந்து பன்முறை துதித்தார் - கீழே விழுந்து எழுந்து பலமுறை
துதித்து வணங்கினார்கள்.
மூவருங்
கூறிய புகழ்மொழியைக் கேட்டு 'எம்மைப்போலப் பேறு
பெற்றவர் யாவர்!' என்று நெஞ்சுருகிப் பின்னும் விழுந்து வணங்கி எழுந்து
பலமுறை வணக்கஞ் செய்தனர்.
(24)
|