|
| 1143. |
இம்மையிற்
பழியாம் மறுமையின் நரகம்
இரந்தவர்க் களித்ததை வாங்கின்
செம்மையோர்க் கெல்லாம் பெருநமையாமித்
தீமைசெய் வதற்குநீ உலகத்(து)
எம்மையோ கண்டாய் இதற்குமுன் தீரா
இடர்பல விளைத்தனை எனினும்
மும்மையும் பழியே சூட்டுதல் தகுமோ
என்றனன் முனியதற் குரைப்பான். |
(இ
- ள்.) இரந்தவர்க்கு அளித்ததை வாங்கின் - இரந்து கேட்ட
வர்க்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கினால், இம்மையில் பழியாம் -
இப்பிறப்பில் பழியுண்டாகும், மறுமையில் நரகம் - மறுமையில் நரகம்
எய்துவர், செம்மையோர்க்கெல்லாம் பெரு நகையாம் - செம்மை
நெறியில் நடக்கும் பெரியோர்க்கெல்லாம் நகைப்பிற்கு இடமான
செயலாகும், இத் தீமை செய்வதற்கு நீ உலகத்து எம்மையோ கண்டாய்
- இத் தீய பழியைச் சுமத்துவதற்கு நீ இந்த உலகத்தில் எம்மையோ
இடமாகக் கண்டாய்?, இதற்கு முன் தீரா இடர் பல விளைத்தனை
எனினும் - இதற்குமுன் எமக்கு நீ பல துன்பங்களை உண்டாக்கினாய்
என்றாலும், மும்மையும் பழியே சூட்டுதல் தகுமோ என்றனன் - மூன்று
பிறவிகளிலும் எமக்குப் பழி சூட்டவே நீ நினைத்தல் தகுமோ? என்றான்,
முனி அதற்கு உரைப்பான் - முனிவன் அதற்கு விடை கூறத்
தொடங்கினான்.
பின்னும்
அரிச்சந்திரன் கோசிகனை நோக்கி 'இரந்தவர்க்குக்
கொடுத்த பொருளை ஒருவன் வாங்கினால் அது பழியாம்; நரகத்திலும்
சேர்க்கும்; அறிஞர் நகைப்பார். இத்தீமையை எங்களுக்குச் செய்கின்றாய்!
இது தக்கதுவோ உனக்கு?' என்றர்.
(31)
| |
கோசிகமுனிவன்
மீண்டும் கூறுதல் |
| 1144. |
கன்னலங்
கழனி நாடும்நன் நகரும்
கருதிச்செய் தவத்தையான் விட்டு
மன்னவன் ஆக வல்லனோ மீண்டும்
வள்ளல்கேள் வசிட்டனும் யானும்
முன்னமே மொழிந்த முறையறி வதற்குன்
முறைமைசோ தித்தறிந் துணர்ந்தேன்
நின்னகர் நீயே ஆளுதி என்ன
நெடுந்தகை மறுத்தனன் மறித்தும். |
(இ - ள்.) கன்னலம் கழனி நாடும்
நன்னகரும் கருதி - கரும்பு
விளையும் வயல்கள் சூழ்ந்த நாட்டையும் நகரத்தையும் எண்ணி, செய்
தவத்தை யான் விட்டு மீண்டும் மன்னவன் ஆக வல்லனோ - செய்கின்ற
தவத்தை விடுத்து மறுபடியும் மன்னவன் ஆக நான் விரும்புவேனோ!,
வள்ளல் கேள் - மன்னனே! கேட்பாயாக, வசிட்டனும் யானும் முன்னமே
மொழிந்த முறை அறிவதற்கு உன் முறைமை சோதித்து அறிந்து
|