பாய்கின்றதுபோல,
உள்ளமும் மகிழ - மனம் மகிழவும், உரோமம்
சிலிர்ப்புற - மெய்ம்மயிர் சிலிர்க்கவும், ஊரில் சேனை வெள்ளமும் அரசர்
தாமும் வியந்து எதிர் கொண்டார் - அயோத்திமாநகரத்தில் உள்ள
சேனைகளும் மற்றை அரசர்களும் பாராட்டி எதிர்கொண்டு வரவேற்கத்
தொடங்கினர். அன்று + ஏ : அசைகள்.
அரிச்சந்திரன்
வருவது கேள்வியுற்ற நகரமாந்தரும் சிற்றரசர்களும்
படைகளும் எதிர்கொண்டழைக்க மனமகிழ்ந்து வந்தனர்; வெள்ளம்
பள்ளத்திற் பாய்வதுபோல உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக எனப் பொருள்
கொள்க.
(67)
|
குடிமக்கள்
மகிழ்ச்சிகூரல் |
1180. |
அயில்நெடும்
படைது றந்த கரத்தினர் அயோத்தி மூதூர்
எயில்கடந் தேகி மன்னைக் கண்டனர் இறைஞ்சி வீழ்ந்தார்
மயிர்பொடிப் புறம னங்கண் மகிழ்ந்திட மறலி கொண்ட
உயிர்வரப் படர்ந்து றந்த உடலமே ஒத்தார் அன்றே. |
(இ - ள்.) அயில் நெடும் படை
துறந்த கரத்தினர் - ஊர்
மக்கள் நீண்டவேல் முதலான ஆயுதங்கள் இல்லாத
கைகளையுடையவராய், அயோத்தி மூதூர் எயில் கடந்து ஏகி மன்னைக்
கண்டனர் - அயோத்தி மாநகரத்தின் பழைமையான மதிலைக் கடந்து
சென்று மன்னனைக் கண்டனர், இறைஞ்சி வீழ்ந்தார் - வணங்கித்
தரையில் வீழ்ந்தனர், மயிர் பொடிப்புற மனம் கண் மகிழ்ந்திட -
மெய்ம்மயிர் சிலிர்க்கவும் மனமும் கண்ணும் மகிழவும், மறலி கொண்ட
உயிர் வர - இயமன் கொண்டுபோன உயிர் வந்தவுடன், படர் துறந்த
உடலமே ஒத்தார் அன்றே - துன்பம் நீங்கப்பெற்ற உடல் போன்று
இன்புற்று இருந்தனர்.
நகரமக்கள் அரசனைக் கண்டதற்குக் கூற்றுவன் கொண்டுபோன
உயிரை உடல் கண்டதனை உவமையாக்கிக் கூறினர். இஃது இல்பொரு
ளுவமையணி.
(68)
|
அரிச்சந்திரன்
தன் மண்டபம் சேர்தல் |
1181. |
ஆரணம் முழங்க
யோத்தி அணிபெருஞ் சேனை யோடும்
வாரண வாசி வேந்தன் படையொடும் வள்ளல் ஏகித்
தோரண வாயில் நண்ணிச் சுடர்மணித் தேரி ழிந்து
பூரண கும்பம் மன்னும் மண்டபம் பொலியப் புக்கான். |
(இ
- ள்.) ஆரணம் முழங்கு அயோத்தி அணி பெருஞ் சேனை
யோடும் - மறைகள் முழங்குகின்ற அயோத்திமாநகரத்தின் அழகிய பெரிய
சேனையோடும், வாரண வாசி வேந்தன் படையொடும் - காசி மாநகரத்து
அரசனுடைய படையுடனும், வள்ளல் ஏகி தோரண வாயில் நண்ணி -
அரிச்சந்திரமன்னன் சென்று தோரணங்கள் கட்டிய கோட்டை வாயிலை
அடைந்து, சுடர் மணித் தேர் இழிந்து - ஒளி வீசும் அழகிய மணிகள்
பதித்த தேரினின்றும் இறங்கி, பூரண கும்பம் மன்னும் மண்டபம் பொலியப்
புக்கான் - நிறைகுடங்கள் வைத்து அழகு செய்யப்பெற்ற மண்டபத்துள்ளே
அழகுபெறப் புகுந்தான்.
|