பக்கம் எண் :


66

     (இ - ள்.) கடி கமழ் மலரும் கலவையும் அழகும் கதிர் மணிப்
பணிகளும் சுமந்து - மணங்கமழ்கின்ற பூக்களையும் சாந்தினையும்
அழகினையும் ஒளிபொருந்திய மணிகளாலாகிய அணிகளையும் தாங்கி,
கொடியென இசைந்து - கொடிபோன்ற பொருத்தமுடையவளாகி, நிறைவு
உறப் பூத்த கொம்பு என அசைந்து அசைந்து ஓல்கி - நிறைவுற்றுப் பூத்த
பூங்கொம்புபோலத் துவண்டு துவண்டு நுடங்கி, அடியிணை படியில் படப்
பொறாது அஞ்சி - இரு பாதங்களும் நிலத்திற் படுவதற்குப்
பொறுக்கமுடியாது பயந்து, அன்புறு கடகரிப் பின்போம் பிடி எனக்
கன்னி நடை பயில் அன்னப் பெடைஎன - அன்பு பொருந்திய
மதம்பொருந்திய ஆண் யானைக்குப் பின் போகின்ற பெண் யானை
போலவும் இளமையான நடை பழகுகின்ற அன்னப்பேடு போலவும், மட
நடை பெயர்வாள் - இளமையான நடை நடப்பான்.

     அசைந்து அசைந்து : அடுக்குத்தொடர். ஆண் யானைக்குப் பின்
போகும் பிடி நடையை உதாரணங்கூறியது நாணுடைமைக்கும்,
அன்னப்பெடை நடையை உதாணங் கூறியது மென்மைக்கும் கொள்க.

     அடியிணை படியிற் படப் பொறாது அஞ்சி எனப் பாதங்களின்
மென்மை கூறப்பட்டது.
                                                    (17)

 
  'தக்க மணவாளன் நீ' எனச் சாற்றுதல்
122. அன்னதன் மையளை அமிர்தினில் பிறந்த
   வணங்கபி டேகத்தை அனந்த
மன்னர்தம் தமக்கு மணம்செயக் கருதி
   மணமொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னமெம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
   முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டன மவணின்
   தோள்களுக் கிசைந்தவள் என்றார்.

     (இ - ள்.) அன்ன தன்மையளை அமிர்தினில் பிறந்த அணங்கு
அபிடேகத்தை - அத்தகைய இயல்புடையவளைத் திருப்பாற்கடலிற் பிறந்த
திருமகள் சிறந்த அமிர்தத்தோடு பிறந்ததுபோல் பிறந்த சந்திரமதியை,
மன்னர் தம் தமக்கு மணம் செயக் கருதி மணம் மொழிந்தவர்க் கெலாம்
கொடாது - அநேக அரசர்கள் தங்கள் தங்களுக்குத் திருமணஞ்
செய்துகொள்ள நினைத்து மணம் பேச வந்தவரில் ஒருவற்கும் கொடாது,
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க்கு அன்றி - முன்னே
சிவபெருமான் யாருக்குக் கொடுக்க வேண்டமென்று சொன்னாரோ
அவர்க்கே அல்லாமல், கடி மணம் முடிக்கிலேன் என்ன - திருமணஞ்
செய்து கொடுக்கமாட்டேன் என்று, சொன்னது ஓர் மொழியும் கேட்டனம்
- சொன்ன ஒப்பற்ற மொழியையும் கேட்டோம், அவள் நின் தோள்களுக்கு
இசைந்தவள் என்றார் - அவள் உன்னுடைய தோள்களிற் கூடுதற்குத்
தக்கவள் என்று முனிவர்கள் சொன்னார்கள்.

     சிவபெருமான் மொழிந்ததாவது : சந்திரமதி மங்கல அணியோடு
பிறந்ததால் அத் திருமங்கல நாண் எவர் கண்ணுக்குத் தோன்றுகிறதோ