|
| |
'அரிச்சந்திரன்
நின் மகட்குத் தக்க கேள்வன் ஆம்' எனச்
சூளுரை
கூறல்
|
| 145. |
புவனமுள்
ளளவும் யாங்கள் புக்கறிந் தனேக கோடி
நவநர பதிகள் தம்மைக் கண்டனம் நறுந்தார் வேந்தே
சிவன்நல்க நீப யந்த திருமகள் தனக்குக் கேள்வன்
அவனல தில்லை என்ன அருந்தவர் எடுத்து ரைத்தார். |
(இ
- ள்.) நறுந்தார் வேந்தே ! - மணம் நிறைந்த மாலை அணிந்த
அரசனே !, புவனம் உள்ளளவும் யாங்கள் புக்கு அறிந்து அநேக கோடி
நவ நர பதிகள் தம்மைக் கண்டனம் - பூஉலக எல்லையளவும் நாங்கள்
போய் ஆராய்ந்து அநேக புதிய அரசர்களைப் பார்த்தோம், சிவன் நல்க
நீ பயந்த திருமகள் தனக்குத் கேள்வன் அவன் அல்லது இல்லை என்ன
அருந்தவர் எடுத்து உரைத்தார் - பரமசிவன் அருளால் நீ பெற்ற அழகிய
மகளாகிய சந்திரமதிக்குத் தக்க கணவன் அரிச்சந்திரன் அல்லது வேறு
யாரும் இல்லை என்று அருந்தவம் புரியும் முனிவர் எடுத்து உரைத்தார்கள்.
நரபதி
- அரசன் கண்டனம் : தன்மைப்பன்மை வினைமுற்று.
நறுந்தார்: பண்புத்தொகை.
(41)
| |
சிவன்
தந்த வரத்தைச் சிந்தையில் எண்ணுதல் |
| 146. |
மையலாற்
றியகு ணத்து மாதவர் உரைப்பக் கேட்டுப்
பொய்யிலா மொழியால் உள்ளம் பொருந்தியும்
பொருந்தா னாகித்
தையலாள் பங்கன் மேனாள் சாற்றி தகைமைக் கேது
செய்யலா நம்மால் என்னத் திகைத்திருந் துரைக்க லுற்றான்.
|
(இ
- ள்.) மையல் ஆற்றிய குணத்து மாதவர் உரைப்பக் கேட்டு -
மயக்கம் அவித்த குணமுடைய சிறந்த முனிவர் கூறச் சந்திரதயன் கேட்டு,
பொய் இலா மொழியால் உள்ளம் பொருந்தியும் பொருந்தானாகி -
அவ்வுண்மை உரையால் மனம் இசைந்தும் இசையானாகி, தையலாள்
பங்கன் மேல் நாள் சாற்றிய தகைமைக்கு - உமை யொருபாகனாகிய
சிவபெருமான் முன்னாளில் உறுதியாக உரைத்த தகுதிக்கு, நம்மால் ஏது
செய்யலாம் எனத் திகைத்திருந்து உரைக்கலுற்றான் - நம்மால் யாது செய்ய
இயலும் என்று மனந்திகைத்துச் சிறிது இருந்து பின் கூறலாயினான்.
உரைக்கலுற்றான்
- ஒருசொன்னீர்மைத்தாய் நின்றது. தையலாள்
பங்கன் சாற்றியது - சந்திரமதி பிறந்ததும் கழுத்தில் பொன்னாண்
தோன்றியது. யாவரும் வியந்தனர். சிவபெருமான் தோன்றி "இனி இஃது
எவருக்கும் தோன்றாது. இதனை எவன் காண்கிறானோ அவனே
இவளுக்கு நாயகன்" என்றான். இதுவே.
(42)
| |
மதிதயன்
'அரிச்சந்திரன் வரின் அறியலாம்' என்றல் |
| 147. |
மூவரா
யவரின் முன்னா மூர்த்தியார் அருளிச் செய்த
தேவரா சியமொன் றுண்டா மன்னது தெரிய வல்லார் |
|