பக்கம் எண் :


 சஞ்யந்தன் முத்திச்சருக்கம் 105


 

கடவாயென்று    கேட்ப,    தேவராசன்    -   இலாந்தவகல்பத்துத்
தேவேந்தினாகிய   ஆதித்யாபன்,    நின்ற   -  நிலைபெற்ற, நின் -
உன்னுடைய,   வெகுளி   -  கோபமாகிய, வெப்பம் - வெதுப்பத்தை,
கருணையால்   -   தயவாகிய ஜலத்தால், அவித்து - அவியப்பண்ணி,
நின்று   -     ஸ்வஸ்தபாவத்தில்     நிலையாகி,      வென்றவர் -
கருமங்களைவென்ற சஞ்சயந்தபட்டாரகரை, பணிந்து - வணங்கி, வா -
வரக்கடவாய்,  (அப்படி வருவையேயாமாகில்) நீவினவியது - நீகேட்ட
ஸமாசாரத்தை,    உரைப்பன் - (அப்போது) சொல்வேன், என்றான் -
என்று சொன்னான், எ-று.                                  (81)

222. என்றலு நின்ற கோபத் தெரிமழை யிடருற் றாப்போல்
    அன்றவன் சொன்ன வின்சொன் மாரியா லவிந்த தாங்கண்
    சென்றது தெளிவு சிந்தை சினவரன் சரண மூழ்கி
    நின்றனன் கமலமாதித் தாபனேர் பட்ட தொத்தே.

     (இ-ள்.)  என்றலும்   -   என்று   சொன்னவுடனே,  நின்ற -
நிலைபெற்ற, கோபத்து - கோபத்தாலுண்டாகிய, எரி - அக்கினியானது,
மழை  -  மழையினால், இடருற்றாப்போல் - கெட்டதுபோல, அன்று -
அப்பொழுது,   அவன்சொன்ன   -   அத்தேவனால் சொல்லப்பட்ட,
இன்சொல்மாரியால்  -  இனியவசனமாகிய மழையினால்,  அவிந்தது -
கெட்டு நீங்கிற்று,   ஆங்கண்  -   அப்படியாமிடத்து,    தெளிவு -
தெளிவானது,   சிந்தை  -  அவன் மனதில், சென்றது - அடைந்தது,
(அவ்வாறாகவே   அவன்)    சினவரன் - ஜிநேஸ்வரனது, சரணம் -
பாதங்களில், மூழ்கி -  படிந்து வணங்கி, கமலம் - தாமரைப்பூவானது,
ஆதித்தாபன்   -    சூரியனுடைய,  நேர் - எதிரில், பட்டதொத்து -
அடைந்து மலர்ந்ததுபோல், நின்றனன் - (ஆதித்யாபதேவனுக்கெதிரில்)
நின்றான், எ-று.                                         (82)

223. நின்றவன் றன்னை நோக்கி முனிவனு நீயு நானும்
    மின்றிகழ் தந்த னோடும் விரும்பிய மனத்த ராகிச்
    சென்றவப் பிறவி தொட்டு வந்தன மின்று காறும்
    ஒன்றுமெஞ் சாமை கேணீ யுரைக்கின்றே னுரகர் கோவே.

     (இ-ள்.)  நின்றவன்தன்னை  - அப்படி நின்றவனை, நோக்கி -
பார்த்து,  முனிவனும்  -  இச்சஞ்சயந்தனும், நீயும் - நீயும், நானும் -
நானும், மின் - பிரகாசமானது, திகழ் - விளங்காநின்ற, தந்தனோடும் -
இவ்வித்துத்  தந்தனோடும்,  விரும்பிய மனத்தராகி, விருப்பங்கொண்ட
மனத்தை யுடையவர்களாகி,  சென்ற - முன் சென்ற, அப்பிறவிதொட்டு
- அந்தப்   பிறப்பாகிய  ஸிம்மஸேன   வரசன்பவ   முதற்கொண்டு,
இன்றுகாறும்  -  இன்றைய  வரையிலும், வந்தனம் - சேர்ந்து பிறந்து
வராநின்றோம்,    உரகர்கோவே   -   தரணேந்திரனே!,  ஒன்றும் -
அச்சங்கதிகளிலொன்றும்,     எஞ்சாமை    -      குறைவில்லாமல்,
உரைக்கின்றேன்    -    யான் சொல்லுகிறேன்,   நீ - நீ,   கேள் -
கேட்பாயாக, (என்று ஆதித்யாபதேவன் கூறத்தொடங்கினான்), எ - று.

____________________

இரண்டாவது :

சஞ்சயந்தன் முத்திச்சருக்கம் முற்றுப்பெற்றது.