அருவியை, போன்றன - ஒத்திராநின்றன;
அந்நகர் - அந்நகரத்தில்,
(மேலே யாடுகின்ற) துகிற்கணங்கள் - துவஜக் கூட்டங்கள், மதி
-
சந்திரனுடைய, மறு - களங்கத்தை, துடைக்கும் - தடவி நீக்குவனவாம்,
(எனவே கொடிகள் சந்திரமண்டலம் வரை
உயர்ந்துள்ளன
வென்பதாயிற்று.) எ-று. (32)
33. பளிக்கறைத் தலத்தினூடு பந்தோடாடு பாவையர்
களிக்கய லனையகண்கள் காமர்பந்தின் மேற்செல்வ
வளைத்தநற் புருவவில் மலர்க்கணை தொடுத்துவில்
லிளைப்பநீங்க மாரனம் பிலங்கிலெய்த தொக்குமே.
(இ-ள்.) பளிக்கறை - ஸ்படிகக்கற்களாலான
பாத்திகளையுடைய,
தலத்தினூடு - தலத்தில், பந்தோடாடு பாவையர் -
பந்தாட்டஞ்
செய்கின்ற சித்ரப்பாவைக்கு ஒப்பாகிய மாதர்களின்,
களி -
களிப்பையுடைய, கயலனைய - கெண்டை மீனுக்கொப்பாகிய, கண்கள்
- கண்களானவை, காமர் - அழகிய, பந்தின்மேல் - அப்பந்துகளின்
மேலே, செல்வ - செல்கின்ற
தோற்றமானது, வளைத்த -
வளைக்கப்பட்ட, நல் - நன்மையான,புருவவில் - புருவமாகிய வில்லில்,
மலர் - புஷ்பம் போன்ற, கணை - கண்களாகிற அம்பை, தொடுத்து -
சேர்த்து, வில்லிளைப்ப -
வில்லிளைக்கும்படி, நீங்க -
அவ்வில்லைவிட்டு நீங்கிச் செல்லுமாறு, மாரன் - மன்மதன், அம்பு -
அவ்வம்பை, இலக்கில் - குறியில், எய்த - எய்த தன்மையை, ஒக்கும்
- நிகர்க்கும், எ-று.
(33)
வேறு.
34. மாலைசாந் தெண்ணெய் சுண்ணங் கைசெய்வார் மறுகு மைந்தர்
கோலவார் குழலி னார்போ லிருந்தன வணிசெய் வீதி
மாலைமா மணியு முத்தும் வீழ்ந்தவை கிடந்த தோற்றம்
மேலுலாம் வானயாறு வீழ்ந்திவட் கிடந்த தொன்றே.
(இ-ள்.) மாலை -
பூமாலைகளையும், சாந்து - சந்தனத்தையும்,
எண்ணெய் - வாசனை
எண்ணெய்களையும், சுண்ணம் -
கந்தப்பொடிகளையும், கைசெய்வார் - கையாற் செய்பவர்களுடைய,
மறுகு - குறுந்தெருவுகள், (அவற்றை யணிகின்ற) மைந்தர் - யௌவன
புருஷரையும், கோலம் - அழகிய, வார் - நீண்ட, குழலினார்போல் -
குழல்களையுடைய மாதர்களையும் போல், இருந்தன - இராநின்றன;
வணிசெய்வீதி - வர்த்தகம் செய்யும் பெருங் கடைவீதிகளில், மாலை
மாமணியும் - சிறந்த இரத்தினமாலைகளும், முத்தும் - முத்துமாலை
முதலானவைகளும், வீழ்ந்தவை - தவறி வீழ்ந்தவைகளாய், கிடந்த -
(ஒருவரும் எடுக்காமல் அவ்வவ்விடங்களில்) கிடந்ததாகிய, தோற்றம் -
விதமானது, மேலுலாம் - ஆகாசத்தில் வியாபித்திராநின்ற, வானயாறு -
ஆகாச கங்கையானது, வீழ்ந்து - விழுந்து, இவண் - இவ்விடத்தில்,
கிடந்தது - கிடந்ததாகிய, ஒன்று - ஒரு தோற்றமாம், எ-று. (34)
|