பக்கம் எண் :


348மேருமந்தர புராணம்  


 

     யறுபதோ டிரண்ட ரையாம் புகையுயர்ந் தெழுந்து வீழு
     மறுபதோ டிரண்ட ரைவில் லுயர்ந்ததோ ருடம்பு பெற்றான்.

     (இ-ள்.)  (இவ்வாறு)  மறுவிலா - குற்றமில்லாத, குணத்தினார் -
குணத்தையுடைய   மூவர்களும்,   போய்   -   சரீரம் நீங்கிப்போய்,
வானவராக - தேவர்களாய்ப் பிறக்க,  மாயா - நீங்காத, கறுவினால் -
த்வேஷத்தினால்,  பாந்தள்  -  மலைப்பாம்பாயிருந்த சத்தியகோஷன்,
போகி   -   ஆயுரவஸானத்துப்போய்,   நரக   நான்காவது - நாலா
நரகத்தை,   எய்தி   -  அடைந்து, அறுபதோடிரண்டரையாம்புகை -
அறுபத்திரண்டரை யோஜனை,  உயர்ந்து - உன்னதமாகி, (அதாவது :
அவ்வளவு தூரம் மேலே), எழுந்து வீழும் - ஆகாயத்தில் மேனோக்கி
யெழுந்து தலை   கீழாக   விழுகின்ற,   அறுபதோடிரண்டரைவில் -
அறுபத்திரண்டரைவில்,  உயர்ந்தது - உன்னதமானதாகிய, ஓருடம்பு -
ஒப்பில்லாத    ஒரு   நரக   சரீரத்தை,   பெற்றான் - அடைந்தான்,
எ-று.                                                 (186)

 747. அறத்தினூங் காக்க மில்லை யென்பது மிதனை யாய்ந்து
     மறத்தினூங் கில்லை கேடு மென்பது மதித்தி வர்தங்
     திறத்தினே யறிந்து கொண்மின் றீக்கதிப் பிறவி யஞ்சில்
     மறத்தைநீத் தறத்தோ டொன்றி வாழுநீர் வையத் தீரே.

    (இ-ள்.)  வையத்தீர் - இப்பூமியிலுள்ளவர்களே!, அறத்தினூங்கு -
தர்மத்தைக்காட்டிலும்    பெரிதாகிய,    ஆக்கம்    -    செல்வம்,
இல்லையென்பதும்   -   இல்லையென்று உலகத்தில்  சொல்வதையும்,
மறத்தினூங்கு   -    பாபத்தைக்காட்டிலும்    பெரிதாகிய, கேடும் -
கெடுகையும்,   இல்லையென்பதும் - இல்லை யென்று சொல்வதையும்,
இதனை - இச்சரித்திரத்தை, ஆய்ந்து - ஆராய்ந்து, மதித்து - எண்ணி,
இவர்  தந்திறத்தின்  -  இந்த  முனிவரன் ஆரியாங்கனை பாம்பாகிய
சத்தியகோஷன்  ஆகிய    இவர்களின்   தன்மையால்,  (அதாவது :
முனிவன் ஆரியாங்கனை யிவர்களால் தருமபலன் சிறந்து நின்றதையும்,
பாம்பால்   பாப பலன் தாழ்ந்து நின்றதையும்), அறிந்து கொண்மின் -
தெரிந்து  கொள்ளுங்கள், (அவ்வாறு தெரிந்துகொண்டு), நீர் - நீங்கள்,
தீக்கதிப்பிறவி  -  கெட்ட  கதியிற்  பிறக்கும் பிறப்புக்கு, அஞ்சில் -
பயந்தால்,  மறத்தை  நீத்து  - பாபத்தை  நீக்கி, அறத்தோடொன்றி -
தருமத்தோடு சேர்ந்து, வாழும் - வாழக்கடவீராக, எ-று.        (187)

வேறு.

 748. மன்னனுந் தேவியு மிளைய மைந்தனு
     மின்னவ ராயினா ரினிய கேவச்சச
     சென்னியி லிருந்தவச் சீய சந்திரன்
     றன்வர வுரைப்பன்கேள் தரண வென்றனன்.