பக்கம் எண் :


432மேருமந்தர புராணம்  


 

முள்ள) மஹிரமுனிவரர்கள், உறையும் - மிகுதியாகச் சேர்ந்து தங்குதல்
கொள்ளும், கோடி சிலையினை - கோடி சிலையென்னும் பர்வதத்தை,
வலம்    வந்து    -   பிரதக்ஷிணமாக வந்து, ஏந்தி -அதனைத் தன்
கரங்களால்  தூக்கி,  பெரியவன் - பராக் கிராமத்தில் மிக்கோனாகிய
விபீஷணன்,    (நின்றான்,    அவ்வாறு)   நின்ற போழ்தில் - நின்ற
காலத்தில்,    வேந்தர்   -     பூமியரசர்களும்,   விஞ்சையர்கள் -
வித்தியாதரவரசர்களும்,    விண்ணோர் - வியந்தர தேவாதிபதிகளும்,
தரும்    -   கொண்டு  வந்து கொடுக்கும்படியான, திறையோடும் -
திறைப்பொருள்களோடும்    பாகுட    வஸ்துக்களோடும்,   வந்து -
இராமகேசவர்களிடத்தில்   வந்து,    அடி - பாதங்களில், தாழ்ந்து -
வணங்கி, பரவினார் - ஸ்துதித்தார்கள், எ-று.                 (29)

920. மலரென மலையை யேந்தி வைத்தவன் மன்னர் சூழ
    வலர்கதி ராழி பின்போய்த் திசையடிப் படுத்து மீண்டு
    நிலமக டிலகம் போலு மயோத்திமா புரத்து நீ
    மலையொடு மதியம் போல மன்னவர் துன்னி னாரே.

     (இ-ள்.) (பின்னர்), மலரென - புஷ்பத்தைப் போல, மலையை -
அந்தப்   பர்வதத்தை,   ஏந்தி  - (மேற்கூறியபடி) தூக்கி, வைத்து -
மறுபடியும்   வைத்து விட்டு, அவன் - அக்கேசவனாகிய விபீஷணன்,
(பல    தேவனாகிய    வீதபயனோடும்),   கூட, மன்னர் - அனேக
தேசத்தரசர்கள்,   சூழ  - சூழ்ந்துவர,    அலர்    கதிர்   - பரந்த
கிரணத்தையுடைய,ஆழி - சக்ராயுதத்தின், பின்போய் - பின்னாகவேச்
சென்று,    அதாவது :    சக்கரத்தைச்    செலுத்தி   அது சென்று
ஒவ்வோரிடத்திலும்   ஜெயத்தையுண்டாக்க அது சென்றவழியே பின்
சென்று)    திசையடிப்படுத்து   - திக்கு விஜயம் செய்ய (அதாவது :
எத்திக்கிலு    முள்ளவர்களையும் தனதாளுகைக்குட் படும்படி செய்ய
அதன்மேல்),    மண்டு    -     திரும்பி, நிலமகள் - பூமிதேவிக்கு,
திகலம்போலும்   - நெற்றிப் பொட்டுக்குச் சமானமாகிய, அயோத்திமா
புரத்து - அயோத்தியா புரியில், நீல மலையோடு - நீல பர்வதத்தோடு,
(கூடிய)    மதியம்    போல   -   சந்திரனைப் போல, மன்னவர் -
அரசர்களாகிய பல தேவ வாஸுதேவரென்னும் விபீஷண வீதபயர்கள்,
துன்னினார் - அடைந்தார்கள், எ-று.                        (30)

921. மதியொடு கரிய மேகங் கண்டமாக் கடலைப் போலப்
    பதியவர் காதல் பொங்கப் பார்த்திபர் புக்க போழ்தின்
    விதியறி புலவர் சூழ்ந்து வெற்றிச்சீ யாச னத்து
    மதியன்ன குடையி னீழல் வைத்துச்சா மரைகள் வீச.

     (இ-ள்.) (அவ்வாறு) மதியொடு - பூர்ணச் சந்திரனோடு, கரிய -
கறுத்த,   மேகம்  - மேக  மண்டலத்தையும், கண்ட - பார்த்த, மா -
பெரிதாகிய,கடலைப் போல - ஸமுத்திரமானது பெருகுவதுபோல, அப்
பதியவர்  - அந்த அயோத்தியா புரியிலுள்ளவர்கள், (கண்டு) காதல் -
ஆசையினால், பொங்க - மிகுதியாக, பார்த்தி