பக்கம் எண் :


478மேருமந்தர புராணம்  


 

பன்னிரண்டாவது :

ஸ்ரீ விஹாரச்சருக்கம்

 1011. காதியைக் கடிந்து வேந்தன் கைவலச் செல்வ னானான்
     வேதிய னமைச்சன் விஞ்சை வேந்தனாய் வியந்து போனான்
     போதணி குழலி னாளும் புதல்வனுந் தேவ ரானார்
     யாதினி யிவர்கள் செய்கை யென்றிடி லியம்ப லுற்றேன்.

     (இ-ள்.)   வேந்தன்  -  ஸிம்மஸேன மஹாராஜன், (கடைசியாக
சஞ்சயந்தனாகி), காதியைக்கடிந்து - தபஞ் செய்து காதி கர்மங்களைக்
கெடுத்து  (பாவமோக்ஷமாகிய  அரஹந்த பதவியை யடைந்து உடனே
அகாதிகருமங்களையும் கெடுத்து), கைவலச் செல்வனானான் - திரவிய
மோக்ஷமடைந்தான்,   வேதியன்  -  பிராம்மணனாகிய, அமைச்சன் -
ஸ்ரீபூதியென்கிற  மந்திரியானவன்,   விஞ்சைவேந்தனாய் - வித்தியாதர
வரசனாகிய  வித்துத்தந்தனாகி,  வியந்து  -  ஆச்சரியத்தையடைந்து,
போனான்     -   போய்விட்டான்,    போதணி    குழலினாளும் -
புஷ்பமாலைகளையணிந்த   அளகத்தையுடைய  இராமதத்தா தேவியும்
புதல்வனும் - அவளுடைய இளைய புத்திரனாகிய  பூர்ணச் சந்திரனும்,
தேவரானார் - தேவர்களானார்கள்  (அதாவது : இராமதத்தை லாந்தவ
கல்பத்தில்   ஆதித்யாபனென்னும்   தேவனாகவும்   பூர்ண சந்திரன்
பவணலோகத்தில்  தரணேந்திரனென்னும்  தேவனாகவும் ஆனார்கள்),
இனி  - இனிமேல்,   இவர்கள் செய்கை - இந்த இரு தேவர்களுடைய
செய்கையானது, யாது என்றிடில் - என்னவென்றால், இயம்பலுற்றேன் -
அதைச் சொல்லத் தொடங்குகிறேன், எ-று.                     (1)

 1012. வேதிகை வேதண் டத்தின் வில்லுநாண் வீக்கிற் றேபோ
      லோதநீ ருடுத்த மண்மே லுத்தர மதுரை யென்னும்
      போதொடு தளிர்கண் மிண்டிப் பொறிவண்டுந் தேனும் பாடத்
      தாதொடு மதுக்கள் வீயுந் தண்பணைச் சோலைத் துண்டே.

     (இ-ள்.)   மண்மேல்  -  இப்பூமியில்,  வேதிகை - மஹாலவண
சமுத்திரத்தின்   வஜ்ரவேதிகையாலும்,  வேதண்டத்தின் - விஜயார்த்த
பர்வதத்தினாலும்,   வில்லு  -   வில்லில்,  நாண் வீக்கிற்றேபோல் -
நாணேறிட்டுக்  கட்டினதுபோலும் (ஆக்கிருதியையுடைய), ஓதநீருடுத்த
- சமுத்திரஜலஞ்   சூழ்ந்த,   மண்மேல்  -   பூமியாகிய இந்தப் பரத
க்ஷேத்திரத்தில்,   போதொடு    -   புஷ்பங்களோடு,    தளிர்கள் -
துளிர்களும்,    மிண்டி    -    நெருங்கி    மிகுதியாகி,    பொறி.
புள்ளிகளையுடைய, வண்