|      பிரமனுடைய கற்பங்களுள் ஒன்றாகிய மேகவாகன கற்பத்தில்     ஏழ்தலமும் புகழும் நாரணன், பிரமன் முதலாக ஏழுலகினையும் அவற்றிடைச்
 சர அசரங்களையும் படைக்கும் விருப்பினால் தேவ தேவனைப் பல நாள்
 மேகத்தின் வடிவங்கொண்டு தாங்கினான்.
      ஓரோர் கற்பம் நிகழும் ஓர் நிகழ்ச்சியால் பெயர் பெறும்; காட்டு;    ‘சுவேதவராக கற்பம்’ (வெள்ளைப் பன்றி வடிவு திருமால் கொண்ட வரலாறு
 பின்வரும்)
 		| நம்மான் இரங்கிக் கடைக்கண் அருள் நல்கி மாலோய் வம்மோசுரர் ஆண்டினில் ஆயிர ஆண்டு மற்றிங்
 கிம்மேக உருக்கொடு தாங்கினை எம்மை வேண்டும்
 அம்மாவரம் நல்குதும் ஓதுதி என்ன அன்னோன்.    4
 |       நம்பெருமான் திருவுளமிரங்கித் திருக்கடைக்கண் பார்வையைச்     சாத்தி, ‘மாலே, வாராய் தேவ அளவையில் ஆயிரவருடம் இவ்விடத்தில்
 இம்மேகவடிவங்கொண்டு தாங்கினை. எம்மை, வேண்டுகின்ற
 அப்பெருவரங்களைத் தருவோம் சொல்’ என, அத்திருமால்,
      வம் என்று ஒருமையில் வந்து, மோஎன்னும் முன்னிலை அசையை    ஏற்றது.
 		| எந்தாய்ஒரு நின்திரு மேனி இடப்பு றத்து வந்தேன் அடியேன் உயர்நின்அருள் வண்மை தன்னால்
 நந்தாதஇவ் வாழ்க்கையும் எய்தினன் ஞாலம் முற்றும்
 பைந்தாள்மல ரோனையும் இன்று படைத்தல் வேட்டேன்.   5
 |       எந்தையே, அடியேன் நினது திருமேனியில் இடப்புறத்துத்     தோன்றினேன். உயர்ந்தநின் அருட்கொடையால் கெடாத இவ்வாழ்வும்
 பெற்றனன். உலக முழுதுடன், பசியநாளமுடைய தாமரை மலரை
 இருக்கையாகக் கொண்ட பிரமனையும் சிருட்டிசெய்தலை விரும்பினேன்.
      எந்தாய்-என்றந்தை என்னும் பொருளுடன், நின் திருமேனியில்     வந்தனன் என்பதற்கேற்ப எம் தாய் எனும் நயம் எண்ணுக.
 		| அவ்வாற்றல் அளித்தரு ளென்னும் அரிக்கு நாதன் இவ்வாற்றல் கச்சிப் பதிஎய்தி இலிங்கந் தாபித்
 தொவ்வாநளி னங்களி னாலுயர் பூசை ஆற்றின்
 செவ்வேபெறு கிற்பை எனத்திரு வாய்ம லர்ந்தான்.      6
 |       படைக்கும் வலிமையைத் தந்தருள்க என்று கூறும் திருமாலுக்குச்    சிவபிரானார் காஞ்சியை அடைந்து சிவலிங்கம் நிறுவித் தனக்கு ஒப்பில்லாத
 தாமரை மலர்களினால் உயர்ந்த பூசனை செய்தால் அப்படைக்கும்
 ஆற்றலைத் திருந்தப் பெறும் வன்மையை யுடைய ஆவாய் எனத்திருவாய்
 மலர்ந்தருளினார்.
 |