சிறையிடைப் படுத்தினன்; சிலச்சில நாட்கள் கழிந்த பின்னர் வணங்கி நின்று சலந்தரனை இரந்து வேண்டித் திருமாலைச் சிறை விடச் செய்தனர். பிறை போலும் பற்களையுடைய அசுரனும் வெற்றிச் செருக்குடன் வாழுநாளில், திருமால் செயல் இறுதிநாள் அடுத்தலின் எறுழ்விடைப் பாகனைத் தெறுவல்என் றெழுந்துயர் கயிலையைச் சேறலும் உறுதுயர்ச் சிறையிடை உறையும்நாள் அன்னவன் பெறுமனைக் கிழத்தியைக் காமுறும் பின்னைகோன். 7 | ஆயுள் முடியு நாள் அடுத்தமையால் ‘வலிய விடையுடைப் பரமனை அழிப்பேன்’ என்றெழுச்சி கொண்டுயர்ந்த கயிலையைச் சேர்ந்த சமயத்தில் மிக்க துயரைச் செய்யும் சிறையிற் கிடந்த நாளில் அவனுக்கு வாய்த்த மனையறம் பூண்ட உரியவளை விரும்பும் இலக்குமி நாயகன், அற்றம்ஈ தென்றறிந் தம்மனைப் புறமுறத் துற்றபூம் பொழிலிடைத் தூத்தவ வடிவுகொண் டுற்றிடக் கண்டனள் ஒசிஇடைப் பணைமுலை முற்றிழை தாழ்ந்துமுன் நின்றிது வினவுவாள். 8 | உரிய காலம் இதுவாகும் என்று துணிந் தம் மாளிகையை அடுத்துச் செறிந்த பூஞ்சோலையில் தூய தவவேடம் தாங்கி இருந்திடத் துவளுகின்ற இடையினையும், பருத்த கொங்கையையும் உடைய தொழில் முற்றுப்பெற்ற அணிகளை அணிந்தவள் கண்டு நெருங்கினள், வணங்கி முன்நின்றிதனை வினவுவாள்: நற்றவத் தடிகளீர் நதிமுடிக் கடவுளைச் செற்றுமீள் வேனெனச் சென்றஎங் கொழுநர்பால் வெற்றியோ தோல்வியோ விளைவதொன் றறிகிலேன் எற்றிது மொழிமின்நீர் என்னமால் கூறுவான். 9 | ‘மெய்த்தவ முடைய அடிகளீர்! கங்கையை அணிந்த சடை முடிக் கடவுளை அழித்துத் திரும்புவேன் எனக் கூறிச்சென்ற எம்கணவர்பால் வெற்றியோ? தோல்வியோ விளைவ தொன்றியாதோ அதனை அறிகிலேன் எத்தன்மையது இது நீவிர் கூறுமின்’ என்னத் திருமாலாகிய முனிவரர் கூறுவார். அஞ்சுபூ தங்களும் அவற்றிடைப் பொருள்களும் பஞ்சுதீப் பட்டது படவிழி திறந்தருள் செஞ்சடைப் பகவன்முன் சென்றெவர் உய்ந்துளார் புஞ்சவெள் வளையினாய் அறிந்திலை போலும்நீ. 10 | |