ஐய னேஅருள் புரிகஆ ரழற்சிகை ஏந்தும் கைய னேஅருள் புரிகபல் கதிரொளி பரப்பும் மெய்ய னேஅருள் புரிகமெய்க் கூத்தெனைக் காட்டும் செய்ய னேஅருள் புரிகெனச் செப்பினன் பலகால் 163 | ‘தலைவனே அருள்புரிக! ஏந்துதற்கரிய நெருப்புக் கொழுந்தினை ஏந்தும் திருக்கையனே அருள்புரிக! பல சூரியர் ஒளியை விரிக்கும் திருமேனியனே அருள்புரிக! உண்மைத் திருக்கூத்தினை அடியேனுக்குக் காட்டும் செவ்வியனே அருள்புரிக’ எனப் பலமுறை விண்ணப்பம் செய்தனர். அன்ன பெற்றிகண் டியாவரும் அதிசயம் எய்தி என்னை என்னைமற் றிதுவெனக் குதுகுதுப் போடும் பொன்ன டித்தலம் போற்றினர் வினாதலும் நெடியோன் மன்னு றும்பெரு மகிழ்ச்சியான் அவர்க்கிது வழங்கும். 164 | அந்நிலைமையை யாவரும் நோக்கி வியப்பெய்தி ‘ஈதென்னே! என்னே!’ என் றதிசயத்தொடும் பொன்போலும் திருவடிகளைப் போற்றினராய் வினாவுதலும் திருமால் நிலைபெறும் பெரு மகிழ்ச்சியினால் அவர்தமக் கிதனைக் கூறுவர். செறியும் நான்மறைச் சிரமிசைப் பரம்பொருள் இந்நாள் அறிஞர் காண்கிலா அற்புதத் திருநடம் எனக்குப் பிறிவ ரும்பெருங் கருணையாற் காட்டிடப் பெற்றேன் மறியும் இவ்வுடல் வருபயன் கிடைத்ததென் றனக்கே. 165 | பொருள் செறிந்த நான்கு வேதங்களின் உச்சியில் வீற்றிருக்கும் முதற்பொருள் அறிஞர்களும் காணக்கூடாததாய் இருக்கின்ற ஞானத் திருநடனத்தை இன்று நீங்காத பெருங்கருணையால் எனக்குக் காட்டிடத் தரிசிக்கும்போது பெற்றேன். அழிந்து வீழும் இவ்வுடம்பு பெற்றதன் ஊதியம் எனக்கே வாய்த்தது. அவ்வ ருட்டிருக் கூத்தினைக் கண்டஆர் வத்தால் இவ்வு றுப்பெலாம் விதிர்விதி்ர்ப் பெய்தின கண்டீர் செவ்வன் ஓர்மின்என் றியம்புசொற் செவித்துளை நிறைப்பக் கொவ்வை வாய்த்திரு முதலியோர் ஆதரங் கொண்டார். 166 | ‘உயிர்களுக்கு அருள்புரிதலையுடைய திருக்கூத்தினைத் தரிசித்த பெருமகிழ்ச்சியினால் அங்கங்கள் யாவும் துடிதுடித்தன காணீர், நன்கு உணர்வீர் ‘ஆமின்’ என்று கூறிய சொற்களைக் காதாரக் கேட்டு கொவ்வைக் கனியை ஒக்கும் அதரங்களையுடைய இலக்குமி முதலானோர் விதுப்புற்றனர். கேட்ட அப்பொழு தேஎதிர் கண்டெனக் கிளர்ந்து காட்டும் வேணவா மீமிசை எழக்கழல் வணங்கி | |