பக்கம் எண் :


110புலவர் குழந்தை

   
           61.    சிறுமறிக் குழாத்தொடு செல்லு மாப்பிணை
                 குறுகிடக் கலையிளங் குரலிற் கூவவே
                 குறுநடைச் சிறார்மறிக் குட்டி யீட்டிடக்
                 குறுமுயற் றோற்பறை கொட்டு வாரரோ.

           62.    கொன்றையம் புறவிடைக் கொடியின் மின்னிவான்
                 குன்றுறை யிளையகார் குறுகி மாலையிற்
                 சென்றவர் வரவெதி ருள்ளிச் செவ்வியர்
                 முன்றிலி னிறைகொள முல்லை யோங்குமால்.
 
பாலை
 
           63.    எல்லிய முதுவெயி லெறிப்ப நல்வள
                 முல்லையுங் குறிஞ்சியு முறைமை தப்பியே
                 நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும்
                 பல்லவங் குருகுவெம் பாலை காணுவாம்.

                 63.    எல்லி - ஞாயிறு. பல்லவம் - தளிர்.

           64.    வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும்
                 துற்றிய யானைதன் றுளைக்கை யைப்பிடி
                 பற்றியே யுரலடி பதைப்ப வெங்கனல்
                 சுற்றிட வுடல்துடி துடித்துச் செல்லுமே.

           65.    மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ
                 இன்னிளங் குருளைமிக் கினைந்து வெம்பிடத்
                 தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
                 நன்னரில் வலியசெந் நாயு யங்குமே.

           66.    போதர வேவிடாய் புலம்பிப் பொள்ளென
                 மாதறு நீர்ச்சுனை மருவி நீர்பெறாப்
                 பாதிரி யலர்பறந் தலையின் பாலிரீஇத்
                 தூதுணம் புறவினந் துயருற் றேங்குமே.

           67.    கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார்
                 படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய்
                 வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால்
                 அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே.
------------------------------------------------------------------------------------------
           62. இறைகொளல் - இருத்தல். 65. வெரீஇ - வெருவி. வாய்வெருவுதல் - சோர்வால் வாய் குழறுதல். குருளை - குட்டி. தாய்மை - அன்பு. நன்னர் இல் - நலமில்லாத. உயங்குதல் - வருந்துதல். 66. மாது - அசை. பறந்தலை - பாலை நிலத்தூர். தூது உண்அம் புறவு - பருக்கைக்கல். 67. கடிகமழ் - மணம் வீசும். படிக்குஉற - நிலத்தில் விழ.