72. கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும் முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும் நெல்லினைக் கரும்பு காக்கும் நீரினைக் கால்வாய் தேக்கும் மல்லலஞ் செறுவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 73. சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி னிகல்வலி யுழுநர் வாழ்வே. ------------------------------------------------------------------------------------------ 68. இன்று இருந்து விருந்துண்டு நாளை சென்மென. 69. தோள் துணை. ஆட்டி - பெண், ‘அம்மா’ என்றபடி. அன்னை - செவிலி. 70. மீளி - பாலைநிலத்தலைவன். கற்பு - மணஞ்செய்து கொள்ளும். விருப்பம். 71. நிரை - ஆவினம். கொடுவரி - புலி. படர் - துயர். 72. கல் - மலை. முருகு - தேன், மணம். மல்லல் - வளம். செறு - வயல். 73. சுற்றுதல் - தாம்பாடுதல், போரடித்தல். ஏறு - எருது. இகல் - மாறுபாடு. |