82. பசிபட வொருவன் வாடப் பாத்தினி திருக்குங் கீழ்மை முசிபடி வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா. 83. பாணியுஞ் சீருத் தூக்கும் பண்ணொடு பொருந்தச் செங்கை ஆணியுந் திவவுங் கூட்டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்தி பாட மகன்றில்கேட் டுவக்கும் பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங் காட்டும். 84. வருமலை யளவிக் கானல் மணலிடை யுலவிக் காற்றிற் சுரிகுழ லுலர்த்துந் தும்பி தொடர்மரை முகத்தர் தோற்றம் இருபெரு விசும்பிற் செல்லு மிளமைதீர் மதியந் தன்னைக் கருமுகில் தொடர்ந்து செல்லுங் காட்சிபோற் றோன்து மாதோ. 85. திரைதரு பொருளு முப்புச் செறிவிலைப் பொருளு மல்கக் கரைவரு கப்பல் நோக்கிக் கானலம் புன்னை சாய்ந்து நரையிதழ்ப் பரத்தி யேங்கு நாள்வெயிற் காலை யுப்பின் பெருவளக் குவிய லீட்டும் பெருமணல் நெய்த லோங்கும். ------------------------------------------------------------------------------------------ 81. முட்டு - தடை. மட்டு - தேன், மணம். ஆலித்தல் - ஒலித்தல். 82. முசிதல் - அறுதல். முசிபடுதல் - கெடுதல். வசிபட - இருப்பிடம் கெட, துவர் - பவளம். 85. மல்க - நிறைய. நரை இதழ் - (பிரிவால்) வெளுத்த இதழ். |