84. பருவமு முருவமும் பண்பு மொத்துள ஒருவனு மொருத்தியு முயர்ந்த வேங்கையின் பெருநிழ லெதிர்ப்படும் பெரிய காட்சியைக் கருங்குழல் காதலன் களிப்பக் காட்டுமால். 85. தாவருங் குறக்குடித் - தமிழ வாய்ச்சியர் நாவரு மனத்தரு நயந்து கைக்கொளப் பூவருந் தேனொடு பொருந்து செந்தினை மாவிருந் தூட்டியே மகிழு வாரரோ. | அறுசீர் விருத்தம் | 86. பண்ணென வினிக்குஞ் சொல்லார் படையெனப் பொலியுங் கண்ணார் விண்ணெனத் திகழைம்பாலார் மின்னென வொளிரும் பூணார் உண்ணென வூட்டுங் கையா ரொத்ததந் துணைவ ரோடு தண்ணெனக் குளிர்ந்து காட்டுந் தடஞ்சுனை யாட லுற்றார். 87. ஓடியே யொளிப்பா ரோடி யொளிப்பரைப் பிடிப்பா ரொன்றாய்க் கூடியே குதிப்பா ரெட்டிக் குதிப்பரைத் தடுப்பார் கண்ணை மூடியே முனைப்பாய் நீருள் மூழ்குவர் மூழ்கு வாரைத் தேடியே பிடிப்பா ராகத் திளைத்துநீ ராடு வாரே. 88. செவ்விய கலவைச் சாந்தந் தெறித்துநீர்ப் படுக்கு வாரும் அவ்வளைக் கைக ளால்நீ ரள்ளியே யிறைக்கு வாரும் கொவ்வைவா யானீர் முக்கிக் கொழுநர்மேற் றூவு வாரும் இவ்வகை பலவுஞ் செய்தே யினிதுநீ ராடு வாரே. 89. தாமரை மலரைச் சூழ்ந்து தயங்குசை வலத்தைக் கண்டு காமுறு வனப்பி னாடன் கருங்குழல் சூழப் பெற்ற ஏமுறு முகமென் றெண்ணி யெடுத்ததை விடுத்து வெட்கிப் போமொரு காளை தன்னைப் பூவையர் நகுதல் செய்வார். ------------------------------------------------------------------------------------------ 86. படை - வாள், வேல். விண் - முகில். ஐம்பால் - கூந்தல்; முடி, குழல், கொண்டை, பனிச்சை, சுருள் என ஐவகையாக முடிக்கப்படுவது. 89. திளைத்தல் - மகிழ்தல். 88. கொவ்வை - கோவைப் பழம். முக்கி - மொண்டு. 89. தயங்குதல் - விளங்குதல், சைவலம் - பாசி. காமுறு - விரும்பப்படும். ஏமுறுதல் - மகிழ்தல். | |
|
|