பக்கம் எண் :


208புலவர் குழந்தை

   
         22.    துள்ளிக் குதித்துத் துவண்டு விளையாடி
               வெள்ளத் தடங்கண்ணார் விழிபோன் மருண்மானே
               உள்ளத்தைக் கொண்டேயா னோவா திருந்தேங்கப்
               பொள்ளெனச் சென்றார்க்கென் புதுநிலையைக் கூறாயோ.

         23.    வகிர்ந்த பனங்கிழங்கின் வாயசெங் கானாராய்
               புகுந்தென் னலனுண்ட புனன்மருத வூரனுக்குத்
               தகுந்த திதுவேளை தான்வாரா தேயொழியின்
               மிகுந்த வளமுன்றில் மிதியாதீ ரென்றுரையாய்.

         24.    வெண்டா மரைவாழும் வெள்ளைச் சிறையனமே
               உண்டே யெனதுநல மொளித்தகடற் சேர்ப்பனுக்கு
               வண்டார் குழலொருத்தி மலர்க்கண்முத் தாடியதைக்
               கண்டே னெனவுள்ளங் கனியச் சொலுவாயே.

         25.    என்னைத் தனியேவிட் டென்னலமுண் டேசென்றான்
               தன்னைத் தொடர்ந்தகன்ற தாழா மடநெஞ்சே
               உன்னை யவனுக் குறவாக்கி யேவைத்த
               என்னைப் பிரிந்தவுன திழிதகைமை யென்கொல்லோ.

         26.    அன்னவனைக் காட்டென் றம்மா வெனைக்கொத்தித்
               தின்னு மடநெஞ்சே செழுங்குன்ற வாணனிடம்
               என்னை விடுத்தே யெழீஇச்செல் குவையாயின்
               உன்னோ டிருகண்ணு முடன்கொண்டு சென்றீவாய்.
 
கலித்துறை
 
         27.    பிரியே னென்றான் வாய்மொழி பொய்யிற் பிரியாதே
               உரியா ரெல்லா மூரலர் தூற்றற் குரியாரே
               பெரியா ரெல்லாங் காவல் படுப்பிற் பெரியாரே
               தெரியா வந்தான் சொல்லிய வொன்றுந் தெரியேனே.

         28.    மழையே லாதான் கைபுனை வண்ண மலர்கொண்ட
               தழையே யென்றாள் தோழியு நானுந் தட்டில்லேன்
               உழையா நின்றா ருள்ள முவக்கு முறையீதோ
               கழையே தின்றார் வேம்பி லினிப்புக் காண்பாரோ.
------------------------------------------------------------------------------------------
         22. இது, இருத்தற் குறிப்பு. 23. இது, ஊடற் குறிப்பு. 24. இது, இரங்கற் குறிப்பு. 26. கண் காட்டென்று கொத்தித் தின்கிறது கொண்டு செல் என்பதாம். 28. உழைதல் - வருந்துதல். உறை - மருந்து, கழை - கரும்பு.