பக்கம் எண் :


226புலவர் குழந்தை

   
        72.     என்றவர்கள் வாழ்த்தினா ரேத்தினார் பூப்பெய்தார்
               ஒன்றிய பல்லியமு மோவென்ற வேகடலின்
               மன்றங் கமழு மணமாலை தோள்மாற்றித்
               துன்று மணவாழ்க்கைத் துணைவர்க ளானாரே.

        73.     தண்டமிழ்த் தாயகத்தைத் தாங்கற் குறுதுணையாக்
               கொண்ட தமிழ்த்திருவைக் கூடி மகிழ்ந்தினிது
               பண்டவழுஞ் செந்தமிழ்போற் பல்லாண்டு வாழ்கவென
               வண்டமிழ் வாணரெலா மங்கலம் பாடினரே.

        74.     கான்பூத்த நறுமலருங் கடற்கானற் கழிமலரும்
               தேன்பூத்த மரைமலருந் செழுங்குறிஞ்சித் தேமலரும்
               தான்பூத்த பொன்மலருந் தமிழ்மக்கள் தூவியதால்
               மீன்பூத்த விசும்பென்ன விளங்கியதம் மணப்பந்தர்.

        75.    ஆர்த்தனமங் கலமுரசம் ஆர்த்தனமங் கலச்சங்கம்
               ஆர்த்தனபல் லியமெங்கும் ஆர்த்தபூந் தொடைவண்டர்
               ஆர்த்தனபூ வையுங்கிளியும் ஆர்த்தனசெந் தமிழ்மலர்வாய்
               ஆர்த்தனவந் நகர்முழுதும் ஆர்த்தனபே ரலைகடலே.

        76.     வந்திருந்த தமிழரெலாம் வரிசைபல வகைநல்கிச்
               செந்தமிழின் றிறம்வாழ்த்திச் சிறப்பமண விருந்துண்டு
               தந்தமது திருநகர்க்குத் தாஞ்சென்றார் விடைகொண்டே
               பைந்தொடியும் ஐந்தகனும் பலநாளங் கினிதிருந்தார்.

        77.     ஆங்குபல நாள்கழிய வண்ணலுந்தன் மாமனிடம்
               பாங்குடனே விடைபெற்றுப் பலவரிசை யினனாகி
               ஓங்கியவந் நகர்நீங்கி யுரியவர்கள் புடைசூழப்
               பூங்கொடியோ டினிதிலங்கைப் பொன்னகரம் போய்ப்புக்கான்.

        78.     தேன்பூத்த நறுந்தொடையல் திசைமணக்குஞ் செழியதமிழ்க்
               கோன்பூத்த மலர்வண்டார் குழலியொடு வரக்கண்டே
               ஊன்பூத்த வுயிரெல்லா முளம்பூத்த வுணர்வினவாய்
               வான்பூத்த மதிலிலங்கை மகிழ்பூத்து வயங்கினதே.
-------------------------------------------------------------------------------------------
        73. பண் தவழும். 75. அவை அலைகடல் போல் ஆர்த்தன. 76. ஐந்தகன் - தமிழகன், தமிழுணர்ந்தோன். ஐந்து - ஐந்நிலமும், எழுத்து முதலைந்தும்.