பக்கம் எண் :


298புலவர் குழந்தை

   
        10.    பாவைய ரெங்கை பணிதலை நின்று
                   பசுமயிற் குழாமெனக் கூடி
              ஏவலிற் றிறம்ப லென்பதை யறியார்
                    இனியன வாயநம் பொருள்கள்
              யாவையு மவளுக் குரியவை யின்னும்
                    ஆவன வுண்டெனிற் செய்கம்
              பூவையுங் குயிலுங் கிள்ளையும் பாடும்
                   புனிதவின் றமிழகம் புரப்போய்.

        11.    தங்குடி மக்கள் அரசிலை யென்று
                    தவித்திடத் தன்னலங் கருதி
              இங்கியா னிருத்தல் தகாதெனத் தாங்கள்
                   இருமெனக் கூறியுங் கேளாள்
              அங்கினி தேகி யிருந்துதன் மக்கட்
                    கரசியா யருந்துயர் மறந்து
              மங்குலை நிகர்ப்பக் குடிபுறங் காத்து
                   வருகிறாள் மதிமுக மானும்.

        12.    கரனெனுந் திறலோன் வேண்டுவ செய்து
                    கண்ணிமை யாமெனக் காப்ப
              மரமடர் விந்த நாட்டினிற் புரிசை
                    மதியணி விந்தக மதனில்
              ஒருகுறை யின்றிப் புனமயில் போல
                    ஒப்புடன் போற்றுமெய்த் தோழி
              அருகுற வினிது வாழ்கிறாள் தமிழர்
                    அரசியாய்ப் பரிசொடா தலினால்.

        13.    இனையுதல் தவிர்க என்றுமே தலைவி
                    இனியன பலசொலித் தேற்ற
              அனையினு மினிய வன்பொடு தமிழர்க்
                   காக்கமே யனானொரு வாறு
              மனமது தேறிக் கண்மணீ என்றன்
                   வாழ்வி்னுக் கடிப்படை யாவார்
              நினையல வேறு கண்டிலேன் என்ன
                    நீள்குழல் தடவியென் மயிலே.