116. உடையனை யூரி லில்லா தோட்டிவிட் டவனில் வேளை குடிகளை வழிப்ப டுத்திக் கொண்டனை கொண்டன் னோரால் முடிபுனை வழியுஞ் செய்து மோசஞ்செய் திடவும் பார்த்தாய் கடிதினில் நாட்டை விட்டுக் கானகம் செல்வா யென்றாள். 117. தங்கள்சொற் படியே யென்றன் தம்பியே நாடா ளட்டும் இங்கியா னிருந்தா லென்ன என்பையேற் குடிக ளுன்பால் தங்கிய அன்பால் நாட்டைத் தருகெனப் புரட்சி செய்வர் வெங்குறை யுடையோ னென்று வேந்தையும் பழிப்ப ரன்றோ. 118. பெற்றபிள் ளையைப்பல் லாண்டாய்ப் பிரிந்தவ னுரிமை தீர மற்றவன் றன்னைப் பாவி மறந்துனை மகனாக் கொண்டேன் பொற்றுற வளர்த்து வந்த பொருகிடாய் மார்பில் பாய்ந்த சொற்றனை நினைக்கச் செய்தென் றொடர்பையு மறுத்துக் கொண்டாய். 119. தன்னல மிலையேல் மக்கள் வாழ்க்கையே சலித்துப் போகும் தன்னலம் பிறர்ந லத்தைத் தடுப்பது தகவ தன்றுன் தன்னலம் பிறர்ந லத்தைத் தடுத்ததாற் றகர்ந்த தப்பா தன்னலம் பொதுந லத்தின் றாயென வறிகு வாயே. 120. உள்ளத்தை யுரைக்க ராம னூமனி னுள்ளம் வெள்கிக் கள்ளத்தை யறிந்தா ளென்ற கவலையங் கடலில் வீழ்ந்து துள்ளித்தன் கரைகா ணானைத் தாயொடு தொழுதெ னன்னாய் புள்ளொத்த கான மின்றே போகிறே னென்று போனான். 121. எண்ணிய வெண்ணஞ் சிந்த இளையதாய் சொல்லே றுண்ட புண்ணொடு போவான் றன்னைக் கண்டுமே புலர்ந்த காமக் கண்ணியர் கெடுத்தான் மன்னன் காட்டினுக் கோட்டித் தங்கள் அண்ணியன் றனையென் றேங்க அன்னைபா லணைந்தா னம்மா 122. பெற்றவள் கண்டு மைந்த பெருகிய கவலை யென்ன சொற்றவ றாத வுந்தை சுடர்முடி புனைவார் என்ன உற்றதை யுரைத்தா னுள்ள முடைந்தவள் ஐயோ மைந்தா மற்றென் செய்வே னென்று வயிற்றினி லடித்துக் கொண்டாள். | |
|
|