28. அயல கத்தை யடைகுதல் நயம லவென நாடிடாக் கயவன் கீழ்மகன் காமுகன் செயல கத்திலாத் தீயவன். 29. நஞ்சி னுக்கொரு நஞ்சினன் வஞ்ச கர்க்கொரு வஞ்சகன் பஞ்சின் மெல்லடிப் பாவைமார் துஞ்ச விற்றொழிற் சுள்ளியே. 30. தீய வெல்லாந் திரண்டொரு வாய வோருரு வாயவன் தூய செந்தமிழ்த் தோகைமான் மேய சோலையை மேயினான். 31. ஈம வாழ்க்கை யினப்படும் நாம விற்கையி ராமனும் ஏம மற்றங் கியலிய காம வல்லியைக் கண்டனன். | கலித்துறை | 32. தனித்து நின்றவத் தன்னிகர் தையலைத் தடங்கண் இனித்த வாவிடக் காண்டலு மிழிதகை காமுற் றினத்தி னீங்கியே யெழிலுடை யிளமயில் போலிப் புனத்து நின்றிடும் பூவைநீ யாரெனப் புகன்றான். 33. கோவை வாய்திறந் திந்நிலம் புரந்திடுங் கொடியான் யாவ னோவட வாரியன் போற்றவக் கோலம் மேவி யேகொடு வில்லுடைக் கையனா விளங்கும் பாவி போன்றநீ யாரெனக் கேட்கவப் பாவி. 34. பொன்னம் பாவையான் பொருவிலா வயோத்தியைப் புரக்கும் மன்னன் காணுதி ராமனென் றென்பெயர் வழங்கும் என்னின் பின்னவ னிலக்குவன் என்மனை சீதை அன்ன ளோவக வானவ ளழகிலா வடிமை. ------------------------------------------------------------------------------------------- 28. செயல் - ஒழுக்கம். 29. சுள்ளி - சிறுமை யுடையவன். 31. ஈமம் - சுடுகாடு. சுடுகாடுபோல உடலுண்டு வாழ்வோர். நாமம் - அச்சம். ஏமம் - காவல். 34. அகவு - வயது. | |
|
|