4. இப்பெடையாண் மயிலினிடம் வலியச்செல் வதைப்பாரீங் கிருந்தாற் சீதை இப்படியே யெனைப்பார்த்து வலியவந்து சேர்ந்தின்ப மீவா ளன்றோ எப்படியான் றனித்துய்வே னிறைபிரியி னுயிர்தரியே னென்பா ளன்போ டெப்பொழுது மெல்லெனத்தா னேமுந்திப் பேசுபவ ளென்செய் கேனே. 5. கட்டழகி தன்னோடீங் கிருந்தேனே லரசிழந்து கடிகொள் நாட்டை விட்டுவந்த பெருந்துயரு மறந்துவிடு மவட்காணா விடிலென் னாவி விட்டிடுவே னெனப்புலம்பத் தம்பியுமா ரிடத்தினுமே மிகுந்த பற்றுக் கெட்டதென வறியீரோ வெனத்தேற்றி யாங்கிருந்து கிளம்பி னாரே. 6. அங்கிந்து சென்றவர்கள் மதங்கமுனி நிலையடைய வவனு மைந்தீர் எங்கிருந்து வருகின்றீர் முகவாட்டத் தோடென்ன வெந்தா யென்றன் மங்கைதனைக் கொண்டிலங்கை மன்னவனுஞ் சிறைவைத்தான் மனையை மீட்க இங்கிருக்குஞ் சுக்கிரீவ னுதவிதனை நாடிவந்தே னென்ன வன்னான். 7. ஓகொடிய னென்செய்தான் சீதையையே னெடுத்தகன்றா னுரையா யென்ன மாகொலையின் வரலாற்றை யெடுத்தியம்ப வதுகேட்டு மதங்கன் மைந்தா தோகையைக்கொண் டேகினது மொருவகையி னஞ்செயற்குத் துணையே யாகும் ஆகையினால் நீவருந்தே லெனத்தேற்றி யிருக்கையிலாங் கனுமன் வந்தான். ------------------------------------------------------------------------------------------- 4. இறை - இமைநேரம். 7. ‘நம்செயல்’ என்றது - ஆரியர் தமிழகத்தை நிலைபெற வழிசெய்தலை. | |
|
|