23. அடலனுமா எனக்குன்னா லாவதொரு செயலுண்டு கடலுலகிற் பிறந்தவர்கள் காண்பதுயர் வாழ்வல்லான் அடிமையினை விரும்புபவ ரகலிடத்தி லுளரோகாண் கொடுமையினு மிகுகொடுமை குடிப்பெருமை யிலதன்றோ. 24. இளமையிலே பெற்றோரை யிழந்துவிட்டேன் என்செய்கேன் வளமையிலே மிகுந்ததமிழ் மாமன்னர் குடிப்பிறந்தும் களமதிலே பொலிதூற்றப் பதர்போலக் கடைப்பட்டேன் உளமதிலே யுளதொன்றை யுரைக்கின்றே னுன்னிடத்தில். 25. முன்வந்து பிறந்தவன்பொன் முடிசூடி யரசாளப் பின்வந்து பிறந்ததனாற் பிழையென்ன செய்தேன்மன் மின்வந்த முடிசூடி மிக்கோயுன் னரசேபோல் மன்வந்து தொழுமரச வாழ்வடைய மனக்கொண்டேன். 26. ஆதலினா லுன்வரவென் ஆங்கால மேபோலும் சீதையைமீட் பதற்கென்னா லாவதெலாஞ் செய்கின்றேன் ஓதியிதை ராமனிட முன்னிறைபோ லென்றனையும் மாதமிழர் பேரரசாய் வாழ்விப்ப துன்கடனே. 27. ஊட்டுதமிழ் வாயனும உள்ளபடி சொல்லுகிறேன் நாட்டரச ராய்நீங்கள் நாடாளுஞ் செய்தியினைக் கேட்டமுத லென்னகத்தே கிளைத்தெழுந்த வெண்ணமின்று கூட்டினது நம்மையொன்று குறையில்லே னெனவனுமன். 28. தென்னிலங்கைப் பேரரசே சீதைமண வாளனுனை மன்னவனாய்த் தான்வாழ வைத்திடுவான் றப்பாமல் அன்னவனுங் கார்கால மகன்றவுட னீங்குறுவான் சொன்னபடி நீயவனைத் துணையாகக் கொள்வாயே. 29. புகலடைந்தார் தம்மையவன் பொன்றினுங்கை விடமாட்டான் தகவுடையோய் எம்மரசு தமக்குரைத்த மொழிப்படியோர் பகலினிலே பகைமுடித்துப் பைம்பொன்முடி யதுபுனைந்தான் முகைவிரிந்து மலராகும் முறையேயுன் முதுவாழ்வே. 30. ஆகையினா லிதுபற்றி யையப்பா டினிவேண்டா வேகையிலே சோறுண்ண விரும்புவது முறையாமோ தோகையைவிட் டிடுமின்றேற் றுன்புறுவோஞ் சிலைராமன் வாகைபுனை வானெனவுன் மன்னவனுக் கெதிர்மொழிக. | |
|
|