48. வில்ல டிப்பவர் வேலி லிடிப்பவர் மல்ல டுப்பவர் வாளி னொடிப்பவர் கொல்ல டுப்பவர் கூடக் களிற்றினம் நெல்ல டிப்பவர் நேர வடிக்குமே. 49. சோலை வாரியாச் சூழ்பனை தென்னையின் காலை யீரவக் காய்கள் சிதறல்போற் சாலை வீரர் தலைகள் சிதறவே காலை வாரி யடிக்குங் களிகள். 50. அதரி யாடெருத் தாவினம் போலவே கதறி வீழ்ந்துகை கால்தலை மூளைகண் சிதறி யோடிடச் செங்களம் பட்டிடக் குதிரை யோடிக் குளம்பி னுழக்குமே. 51. கழையென னத்திரள் காலிற் குருதிநீர் குழைய விட்டசெஞ் சேற்றிற் குதிரைகள் மழைய டுக்கும் வயலி னிடைப்பசுந் தழைமி திப்பவர் தம்மின் மிதிக்குமால். 52. கால றுந்தன கைக ளறுந்தன மேல றுந்த விழிக ளறுந்தன தோள றுந்தன துன்னஞ் சுடர்முடி ஏல றுந்த விருபடை வெள்ளமே. 53. ஊறெ டுத்த வுடலுகு செம்புனல் ஆற டுத்த வறுவை புரளலாற் சேற டுத்த சினப்படை யாளர்கள் மாற டுத்த வலம்படு செங்களம். 54. பொருது வெந்நுறப் போம்படை முன்செலீஇப் பெருகி மேல்வரும் பேணலர் தானையை வருவி சைப்புனல் வாய்கற் சிறையென ஒருவன் றாங்கி யுழக்கி யழிக்குவன். ------------------------------------------------------------------------------------------- 48. மல் - உடற்போர். நொடித்தல் - கொல்லல். நேர - போல. 49. கால் - அடிமரம். ஈர - வெட்ட. சால் ஐ - தகுதியான. 50. அதரியாடல் - நெற்போரடித்தல். 51. கழை - மூங்கில். மழையடுத்தல் - நீர்நிறைதல். 52. ஏல் - மிக. 53. ஊறெடுத்த - ஊறிய. அறுவை - அற்றவுடல். புனல் - ஆறு அடுத்த களம் சேறடுத்த என்க. 54. கல்சிறை - கல்லணை. | |
|
|