4. புலவு வேலவன் போர்த்திறங் காணவெண் ணிலவு கான்றிட நீடுயர் வான்விடுத் துலகு மேவு முயர்மதி போலவெண் விலகு தண்குடை வெள்ள நிழற்றவே. 5. அண்ண லாண்மை யறிந்த கழுகுகள் மண்ணில் வீழும் வடவ ருடலினை உண்ண முன்பறந் தோடுதல் போலவே விண்ணி லொண்கொடி வெள்ளம் பறந்தன. 6. புலவ ரோடு பொருநருங் கூத்தரும் இலகு பாணரு மின்னிசைப் பாட்டியும் பலவர் சூதரும் பாடியும் ஆடியும் குலவு தேர்மிசைக் கூடியே சென்றனர். 7. வாளும் வேலும் வலம்பட வீசவர் தோளுந் தோளுந் துவன்றிட மூசுவர் கேளுங் கேளுங் கிளர்மறம் பேசுவர் ஆளு மாளு மரும்பகை யேசுவர். 8. வாளும் வேலும் வளைதடி யோடமை ஆளி மொய்ம்பினை யாளுந்தா ளாண்மைசேர் மீளி யோடு வெறிக்கரி தேர்பரித் தூளி யொண்படாந் தொக்கெனப் போர்த்ததே. 9. யானை வெள்ள மழன்றுள முன்செலத் தானை வெள்ளந் தறுக ணுடன்செல ஏனை யுள்ள மெனவிரைந் தேசெலச் சேனை வெள்ளஞ் செருக்களம் புக்கதே. 10. புக்க வெள்ளம் பொருகள மெங்கணும் பக்க மாமலை பாயு மருவியாற் றொக்க நின்ற துகளடி யோடறத் தக்க தென்று ததும்பி நிறைந்ததே. 11. கரியி னோடு கரிகள் பொருதன பரியி னோடு பரிகள் பொருதன அரியி னோடரி போல வடலுடைப் பெரியரோடு பெரியர் பொருதனர். ------------------------------------------------------------------------------------------- 4. எண் விலகு - எண்ணற்ற. 7. துவன்றிட - நெருங்கிட. மூசல் - மொய்த்தல். 8. மீளி - மறவன். தூளி - புழுதி. படாம் - மேற்கட்டுச் சேலை. | |
|
|