|
12
அறவணர்த் தொழுத காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை பாத்திரம் கொண்டு
|
|
|
தன்னூர்
அறவணர்த் தொழுத பாட்டு
]
|
|
|
|
|
|
ஆங்குஅவர் தம்முடன் அறவண அடிகள்
|
|
|
யாங்குஉளர் என்றே இளங்கொடி வினாஅய்
|
|
|
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
|
|
|
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி
|
|
5
|
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி
|
|
|
|
|
|
மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி,
|
உரை
|
|
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்,
|
|
|
உதய குமரன்ஆங்கு உற்றுஉரை செய்ததும்,
|
|
|
மணிமே கலாதெய்வம் மணிபல் லவத்திடை
|
|
10
|
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்,
|
|
|
|
|
|
ஆங்குஅத் தீவகத்து அறவோன் ஆசனம்
|
|
|
நீங்கிய பிறப்பு நேரிழைக்கு அளித்ததும்,
|
|
|
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்
|
|
|
களிக்கயல் நெடுங்கண் கடவுளின் பெற்றதும்,
|
|
15
|
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
|
|
|
|
|
|
வெவ்வினை உருப்ப விளிந்துகேடு எய்தி
|
|
|
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
|
|
|
கோதைஅம் சாயல் நின்னொடும் கூடினர்
|
|
|
ஆங்குஅவர் தம்திறம் அறவணன் தன்பால்
|
|
20
|
பூங்கொடி நல்லாய் கேள்என்று உரைத்ததும்,
|
உரை
|
|
|
|
|
உரைத்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம்
|
|
|
தனக்குஉரை செய்துதான் ஏகிய வண்ணமும்,
|
|
|
தெய்வம் போயபின் தீவ திலகையும்
|
|
|
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்,
|
|
25
|
அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை
|
|
|
|
|
|
வணங்குஉறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்,
|
|
|
ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால்
|
|
|
கேள்என்று உரைத்துக் கிளர்ஒளி மாதெய்வம்
|
|
|
போகென மடந்தை போந்த வண்ணமும்
|
|
30
|
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்,
|
உரை
|
|
|
|
|
மணிமே கலைஉரை மாதவன் கேட்டுத்
|
|
|
தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப்
|
|
|
பொன்தொடி மாதர் நல்திறம் சிறக்க
|
|
|
உற்றுஉணர் வாய்நீ இவர்திறம் உரைக்கேன்:
|
|
35
|
நின்நெடுந் தெய்வம் நினக்குஎடுத்து உரைத்த
|
|
|
|
|
|
அந்நாள் அன்றியும் அருவினை கழூஉம்
|
|
|
ஆதி முதல்வன் அடிஇணை ஆகிய
|
|
|
பாதபங் கயமலை பரவிச் செல்வேன்
|
|
|
கச்சயம் ஆளும் கழல்கால் வேந்தன்
|
|
40
|
|
|
|
|
|
|
மாபெருந் தானை மன்ன நின்னொடும்
|
|
|
தேவியர் தமக்கும் தீதுஇன் றோஎன
|
|
|
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
|
|
|
ஒளிஇழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
|
உரை
|
45
|
புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று
|
|
|
|
|
|
மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
|
|
|
ஆங்குஅது கேட்டுஓர் அரமியம் ஏறித்
|
|
|
தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம்
|
|
|
கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப
|
|
50
|
பழவினைப் பயன்நீ பரியல்என்று எழுந்தேன்
|
|
|
|
|
|
ஆடுங் கூத்தியர் அணியே போல
|
|
|
வேற்றோர் அணியொடு வந்தீ ரோஎன
|
|
|
மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம்
|
|
|
துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான்,
|
உரை
|
55
|
பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
|
|
|
|
|
|
நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்:
|
|
|
தரும தலைவன் தலைமையின் உரைத்த
|
|
|
பெருமைசால் நல்அறம் பெருகா தாகி
|
|
|
இறுதிஇல் நல்கதி செல்லும் பெருவழி
|
|
60
|
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்குச்
|
|
|
|
|
|
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று
|
|
|
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது
|
|
|
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
|
|
|
உண்டுஎன உணர்தல் அல்லது யாவதும்
|
|
65
|
கண்டுஇனிது விளங்காக் காட்சி போன்றது
|
உரை
|
|
|
|
|
சலாகை நுழைந்த மணித்துளை அகவையின்
|
|
|
உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும்
|
|
|
ஆங்குஅத் துளைவழி உகுநீர் போல
|
|
|
ஈங்கு நல்அறம் எய்தலும் உண்டுஎனச்
|
|
70
|
சொல்லலும் உண்டுயான் சொல்லுதல் தேற்றார்
|
|
|
|
|
|
மல்லல்மா ஞாலத்து மக்களே ஆதலின்
|
உரை
|
|
சக்கர வாளத்துத் தேவர் எல்லாம்
|
|
|
தொக்குஒருங்கு ஈண்டித் துடிதலோ கத்து
|
|
|
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
|
|
75
|
இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து
|
|
|
|
|
|
விரிகதிர்ச் செல்வன் தோன்றினன்
என்ன
|
|
|
ஈர்எண் ணூற்றோடு ஈர்எட்டு ஆண்டில்
|
|
|
பேர்அறி வாளன் தோன்றும்அதன் பிற்பாடு
|
|
|
பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
|
|
80
|
இரும்பெரு நீத்தம் புகுவது போல
|
|
|
|
|
|
அளவாச் சிறுசெவி அளப்புஅரு நல்அறம்
|
|
|
உளம்மலி உவகையோடு உயிர்கொளப் புகூஉம்
|
உரை
|
|
கதிரோன் தோன்றுங் காலை ஆங்குஅவன்
|
|
|
அவிர்ஒளி காட்டும் மணியே போன்று
|
|
85
|
மைத்துஇருள் கூர்ந்த மனமாசு தீரப்
|
|
|
|
|
|
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்
|
|
|
திங்களும் ஞாயிறும் தீங்குஉறா விளங்கத்
|
|
|
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்
|
|
|
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்
|
|
90
|
ஊன்உடை உயிர்கள் உறுதுயர் காணா
|
|
|
|
|
|
வளிவலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
|
|
|
நளிஇரு முந்நீர் நலம்பல தரூஉம்
|
|
|
கறவைகன்று ஆர்த்திக் கலநிறை பொழியும்
|
|
|
பறவை பயன்துய்த்து உறைபதி நீங்கா
|
|
95
|
விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும்
|
|
|
|
|
|
கலங்குஅஞர் நரகரும் பேயும் கைவிடும்
|
|
|
கூனும் குறளும் ஊமும் செவிடும்
|
|
|
மாவும் மருளும் மன்உயிர் பெறாஅ
|
உரை
|
|
அந்நாள் பிறந்தவன் அருள்அறம் கேட்டோர்
|
|
100
|
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்
|
|
|
|
|
|
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
|
|
|
நாதன் பாத நவைகெட ஏத்துதல்
|
|
|
பிறவி தோறும் மறவேன்; மடக்கொடி
|
|
|
மாதர் நின்னால் வருவன இவ்வூர்
|
|
105
|
ஏது நிகழ்ச்சி யாவும் பலஉள
|
|
|
|
|
|
ஆங்குஅவை நிகழ்ந்த பின்னர் அல்லது
|
|
|
பூங்கொடி மாதர் பொருள்உரை பொருந்தாய்
|
உரை
|
|
ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும்
|
|
|
பாதபங் கயமலை பரசினர் ஆதலின்
|
|
110
|
ஈங்குஇவர் இருவரும் இளங்கொடி நின்னோடு
|
|
|
|
|
|
ஓங்குஉயர் போதி உரவோன் திருந்தடி
|
|
|
தொழுதுவலம் கொண்டு தொடர்வினை நீங்கிப்
|
|
|
பழுதுஇல் நன்னெறிப் படர்குவர் காணாய்
|
உரை
|
|
ஆர்உயிர் மருந்தாம் அமுத சுரபிஎனும்
|
|
115
|
மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை
|
|
|
|
|
|
மக்கள் தேவர் எனவிரு சார்க்கும்
|
|
|
ஒத்த முடிவின் ஓர்அறம் உரைக்கேன்
|
|
|
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
|
|
|
தவப்பெரு நல்லறம் சாற்றினர்,-ஆதலின்
|
|
120
|
மடுத்ததீக் கொளிய மன்உயிர்ப் பசிகெட
|
|
|
|
|
|
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான்என்.
|
உரை
|
|
|
|
|
அறவணர்த்
தொழுத காதை முற்றிற்று.
|
|
|