|
26 வஞ்சி
மாநகர் புக்க காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலை கண்ணகிக்கோட்டம் அடைந்து
|
|
|
வஞ்சிமாநகர்
புக்க பாட்டு ]
|
|
|
|
|
|
அணியிழை
அந்தரம் ஆறா எழுந்து |
|
|
தணியாக்
காதல் தாய்கண் ணகியையும் |
|
|
கொடைகெழு
தாதை கோவலன் தன்னையும் |
|
|
கடவுள் எழுதிய
படிமம் காணிய |
|
5
|
வேட்கை துரப்பக்
கோட்டம் புகுந்து |
|
|
|
|
|
வணங்கி
நின்று குணம்பல ஏத்தி |
|
|
அற்புக்கடன்
நில்லாது நல்தவம் படராது |
|
|
கற்புக்கடன்
பூண்டு நும்கடன் முடித்தது |
|
|
அருளல் வேண்டும்என்று
அழுதுமுன் நிற்ப |
உரை |
10
|
ஒருபெரும்
பத்தினிக் கடவுள்ஆங்கு உரைப்போள் |
|
|
|
|
|
எம்இறைக்கு
உற்ற இடுக்கண் பொறாது |
|
|
வெம்மையின்
மதுரை வெவ்வழல் படுநாள் |
|
|
மதுரா பதிஎனும்
மாபெருந் தெய்வம் |
உரை |
|
இதுநீர் முன்செய்
வினையின் பயனால் |
|
15
|
காசுஇல் பூம்பொழில்
கலிங்கநல் நாட்டுத் |
|
|
|
|
|
தாய மன்னவர்
வசுவும் குமரனும் |
|
|
சிங்க புரமும்
செழுநீர்க் கபிலையும் |
|
|
அங்குஆள்
கின்றோர் அடல்செரு உறுநாள |
|
|
மூஇரு காவதம்
முன்னுநர் இன்றி |
|
20
|
யாவரும்
வழங்கா இடத்தில் பொருள்வேட்டுப் |
|
|
|
|
|
பல்கலன்
கொண்டு பலர்அறி யாமல |
|
|
எல்வளை
யாளோடு அரிபுரம் எய்திப் |
|
|
பண்டக்
கலம்பகர் சங்கமன் தன்னைக் |
|
|
கண்டனர்
கூறத் தையல்நின் கணவன் |
|
25
|
பார்த்திபன்
றொழில்செயும் பரதன் என்னும் |
|
|
|
|
|
தீத்தொழி
லாளன் தெற்றெனப் பற்றி |
|
|
ஒற்றன் இவன்என
உரைத்து மன்னற்குக் |
|
|
குற்றம்இ
லோனைக் கொலைபுரிந் திட்டனன் |
உரை |
|
ஆங்குஅவன்
மனைவி அழுதனள் அரற்றி |
|
30
|
ஏங்கிமெய்
பெயர்ப்போள் இறுவரை ஏறி |
|
|
|
|
|
இட்ட சாபம்
கட்டியது ஆகும் |
|
|
உம்மை வினைவந்து
உருத்தல்ஒழி யாதுஎனும் |
|
|
மெய்ம்மைக்
கிளவி விளம்பிய பின்னும் |
|
|
சீற்றம்
கொண்டு செழுநகர் சிதைத்தேன் |
உரை |
35
|
மேல்செய்நல்
வினையின் விண்ணவர்ச் சென்றேம் |
|
|
|
|
|
அவ்வினை
இறுதியின் அடுசினப் பாவம் |
|
|
எவ்வகை யானும்
எய்துதல் ஒழியாது |
|
|
உம்பர்
இல்வழி இம்பரில் பல்பிறப்பு |
|
|
யாங்கணும்
இருவினை உய்த்துஉமைப் போல |
|
40
|
நீங்குஅரும்
பிறவிக் கடலிடை நீந்திப் |
|
|
|
|
|
பிறந்தும்
இறந்தும் உழல்வோம் பின்னர் |
|
|
மறந்தும்
மழைமறா மகதநல் நாட்டுக்கு |
|
|
ஒருபெருந்
திலகம்என்று உரவோர் உரைக்கும் |
|
|
கரவுஅரும்
பெருமைக் கபிலையம் பதியின் |
|
45
|
அளப்புஅரும்
பாரமிதை அளவின்று நிறைத்துத் |
|
|
|
|
துளக்கம்இல்
புத்த ஞாயிறு தோன்றிப் |
|
|
போதி மூலம்
பொருந்திவந் தருளித் |
|
|
தீதுஅறு நால்வகை
வாய்மையும் தெரிந்து |
|
|
பன்னிரு
சார்பின் பகுதித் தோற்றமும் |
|
50
|
அந்நிலை
எல்லாம் அழிவுறு வகையும |
|
|
|
|
|
இற்றுஎன
இயம்பிக் குற்றவீடு எய்தி |
|
|
எண்அரும்
சக்கர வாளம் எங்கணும் |
|
|
அண்ணல்
அறக்கதிர் விரிக்கும் காலைப் |
உரை |
|
பைந்தொடி
தந்தை யுடனே பகவன |
|
55
|
இந்திர
விகாரம் ஏழும்ஏத் துதலின் |
|
|
|
|
|
துன்பக்
கதியில் தோற்றரவு இன்றி |
|
|
அன்புஉறு மனத்தோடு
அவன்அறம் கேட்டுத் |
|
|
துறவி உள்ளம்
தோன்றித் தொடரும் |
|
|
பிறவி நீத்த
பெற்றியம் ஆகுவம் |
உரை |
60
|
அத்திற மாயினும்
அநேக காலம் |
|
|
|
|
|
எத்திறத்
தார்க்கும் இருத்தியும் செய்குவம். |
உரை |
|
நறைகமழ்
கூந்தல் நங்கை நீயும் |
|
|
முறைமையின்
இந்த மூதூர் அகத்தே |
|
|
அவ்வவர்
சமயத்து அறிபொருள் கேட்டு |
|
65
|
மெய்வகை
இன்மை நினக்கே விளங்கிய |
|
|
|
|
|
பின்னர்ப்
பெரியோன் பிடகநெறி கடவாய் |
|
|
இன்னதுஇவ்வி
யல்புஎனத் தாய்எடுத்து உரைத்தலும், |
உரை |
|
இளையள்
வளையோள் என்றுஉனக்கு யாவரும் |
|
|
விளைபொருள்
உரையார் வேற்றுஉருக் கொள்கென |
|
70
|
மைஅறு சிறப்பின்
தெய்வதம் தந்த |
|
|
|
|
|
மந்திரம்
ஓதிஓர் மாதவன் வடிவாய்த் |
|
|
தேவ குலமும்
தெற்றியும் பள்ளியும் |
|
|
பூமலர்ப்
பொழிலும் பொய்கையும் மிடைந்து |
|
|
நல்தவ முனிவரும்
கற்றுஅடங் கினரும் |
|
75
|
நல்நெறி
காணிய தொல்நூல் புலவரும் |
|
|
|
|
|
எங்கணும்
விளங்கிய எயில்புற இருக்கையில், |
உரை |
|
செங்குட்
டுவன்எனும் செங்கோல் வேந்தன் |
உரை |
|
பூத்த வஞ்சி
பூவா வஞ்சியில் |
|
|
போர்த்தொழில்
தானை குஞ்சியில் புனைய |
|
80
|
நிலநாடு எல்லைதன்
மலைநாடு என்னக் |
|
|
|
|
|
கைம்மலைக்
களிற்றுஇனம் தம்முள் மயங்கத் |
|
|
தேரும் மாவும்
செறிகழல் மறவரும் |
|
|
கார்மயங்கு
கடலின் கலிகொளக் கடைஇக் |
|
|
கங்கையம்
பேர்யாற்று அடைகரைத் தங்கி |
|
85
|
வங்க நாவியின்
அதன்வடக்கு இழிந்து |
|
|
|
|
|
கனக விசயர்
முதல்பல வேந்தர் |
|
|
அனைவரை வென்றுஅவர்
அம்பொன் முடிமிசைச் |
|
|
சிமையம்
ஓங்கிய இமைய மால்வரைத் |
|
|
தெய்வக்
கல்லும் தன்திரு முடிமிசைச் |
|
90
|
செய்பொன்
வாகையும் சேர்த்திய சேரன் |
உரை |
|
|
|
|
வில்திறல்
வெய்யோன் தன்புகழ் விளங்கப் |
உரை |
|
பொன்கொடிப் பெயர்ப்படூஉம்
பொன்நகர்ப் பொலிந்தனள்
|
|
|
திருந்துநல்
ஏது முதிர்ந்துளது ஆதலின் |
|
|
பொருந்துநால்
வாய்மையும் புலப்படுத் தற்குஎன். |
உரை |
|
|
|
|
வஞ்சி மாநகர் புக்க காதை முற்றிற்று.
|
|
|