பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 113


திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் (பிற்காலப் பிரதிஷ்டையான) ரச லிங்கம்
(பாதரசம் வெள்ளி இவற்றின் கலப்பினால் ஆனது) உள்ளது.

     உள்சுற்றில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி
முதலிய சந்நிதிகள்  உள.  அறுபத்துமூவர்   உருவங்களுள்  ஒருசிலவே
வைக்கப்பட்டுள்ளன. பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர்.

     கோஷ்ட  மூர்த்தங்களாக ;  க்ஷிப்ர  கணபதி,  தட்சிணாமூர்த்தி,
இலிங்கோற்பவரிடத்தில்   மகாவிஷ்ணு,  பிரம்மா,  துர்க்கை  ஆகியோர்
உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

     நடராச சபைக்குப் பக்கத்தில், தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப
நாயகர்  உள்ளார்.  தொண்டைமானுக்கு  அவசரத்தில்  காட்சி   தந்ததால்
அம்பாள் சந்நிதி வலப்புறமாக உள்ளதாம். கிழக்கு நோக்கியது.

     அம்பாள் சந்நிதியை வலம் வரலாம். பள்ளியறை உள்ளது. முகப்பில்
துவார பாலகியரும் உளர்.

     வைகாசி விசாகத்தில் பத்து நாள்களுக்குப் பெருவிழா நடைபெறுகின்றது.
இத்தலத்தில்தான்  சிறப்புமிக்க  வைஷ்ணவி  ஆலயமும்,   பிரார்த்தனைக்
கோயிலாகிய ‘பச்சையம்மன் கோயிலும்’ உள்ளன. இக்கோயில் தொடர்பாகச்
சொல்லப்படும் செவிவழிச் செய்தியொன்று வருமாறு :-

     (1) சென்னை  பொன்னேரிப்  பாதையில்  மீஞ்சூருக்கு அருகில் உள்ள
மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை.

     (2) சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை.

     (3) இத்தலத்துக்   கொடியிடை   அம்மை  -   ஆகிய    மூன்று
திருவுருவங்களும்   ஒரே  ஸ்தபதியால்    செய்யப்பட்டவை    என்றும் ;
வெள்ளிக்கிழமை   பௌர்ணமி   சேர்ந்து   வரும்   நாளில்  இம்மூன்று
அம்பிகைகளையும்   ஒரே  நாளில்  முறையே காலையிலும், நண்பகலிலும்
மாலையிலும் தரிசித்தல் பெருஞ்   சிறப்பு   என்றும்  சொல்லப்படுகின்றது.
இன்றும் பலர் இவ்வழக்கத்தைக் கைக்கொண்டு தரிசித்து வருகின்றனர்.

     இராமலிங்க   வள்ளலாரின்   அருட்பாவிலும்,   அருணகிரிநாதரின்
திருப்புகழிலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சுந்தரர், இத்தலத்துப்

தலம்-8