அம்பாள், திருவுருவங்களும் பக்கத்தில் விநாயகர் உருவமும் உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது - நின்ற நிலை. பக்கத்தில் பைரவர். பைரவருக்கு முன்னால் உள்ள தூண் ஒன்றில் கருமாரியின் உருவம் கீழே பாம்புடன் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகாகும்பாபிஷேகம் 23-6-1999-ல் நடைபெற்றுள்ளது. “ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்விடை மனத்தாற் பணிந்தேத்திடப் பாழ்படும் மவர் பாவமே” (சம்பந்தர்) - “மல்லல்பெறு வேற்காட்டர் ஏத்து திரு வேற்காட்டின் மேவியமுன் னூற்காட்டுயர்வேத நுட்பமே” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு & அஞ்சல் திருவள்ளூர் மாவட்டம் - 600 077. தொண்டை நாட்டுத் தலம். தருமமிகு சென்னை மாநகரின் நடுவண் அமைந்துள்ள மயிலாப்பூரில் கம்பீரமாகக் காட்சி தருவது அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயிலாகும். ‘திருமயிலைக் கபாலீச்சரம்’ எனச் சிறப்பிக்கப் பெறும் இத்தலம் அம்பாள் மயில்வடிவிலிருந்து வழிபட்டமையால் ‘மயிலாப்பூர்’ எனப்பெயர் பெற்றது. மயிலை என்றவுடன் நினைவுக்கு வருவதே இத்திருக்கோயில்தான். இறைவன் - கபாலீஸ்வரர். இறைவி - கற்பகாம்பாள். தலமரம் - புன்னை |