29. அச்சிறுபாக்கம் அச்சரப்பாக்கம் | தொண்டை நாட்டுத் தலம். மக்கள் வழக்கில் அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில், மதுராந்தகத்தை அடுத்து இவ்வூர் உள்ளது. புகைவண்டி நிலையம், செங்கற்பட்டிலிருந்தும் அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு. ‘மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பால் தனியூர் அச்சிறுபாக்கம்’ என்பது கல்வெட்டுக் குறிப்பு. இறைவன் - பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்ட நாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார். |